கடந்த பிப்ரவரி 17, 2017 அன்று தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் பணியாற்றிய நடிகை ஒருவர், காரில் கடத்தி செல்லப்பட்டு சில நபர்களால் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த நடிகையை பிளாக்மெயில் செய்வதற்காக இச்சம்பவம் முழுவதுமாக படமெடுக்கப்பட்டதாக தெரிகிறது.


இதையடுத்து, இவ்வழக்கு தொடர்பாக 10 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. மேலும், 7 பேரை போலீஸார் கைது செய்தனர். 


இதற்கிடையில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார்.


மேலும் படிக்க | Beast Vs KGF2: ரிலீசுக்கு முன்பே ‘கே.ஜி.எஃப்-2’வை வென்ற பீஸ்ட்!


இந்நிலையில், இவ்வழக்கில் நடிகர் திலீபின் மனைவி நடிகை காவ்யா மாதவனுக்கும் முக்கிய பங்கு என குறிப்பிடும் செல்போன் ஆடியோக்கள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.


நடிகர் திலீப்பின் சகோதரியின் கணவர் சூரஜ் என்பவரும் அவரது நண்பர் சரத் என்பவரும் உரையாடும் 3 செல்போன் உரையாடல்கள் தற்போது வெளியாகியுள்ளன. 


அந்த ஆடியோக்கள் மூலம், பாலியல் அத்துமீறல் சம்பவத்தில் நடிகை காவ்யா மாதவனின் தூண்டுதல் இருப்பது அம்பலமாகி உள்ளது.


இதன் தொடர்ச்சியாக விசாரணைக் குழுவினர் இந்த மூன்று செல்போன் உரையாடல்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.


இதைத்தொடர்ந்து ஏப்ரல் 11 திங்கட்கிழமை அன்று கேரளா, கொச்சி குற்றப்பிரிவு போலீசார் மேல் விசாரணைக்காக வரும் திங்கட்கிழமை நேரில் ஆஜராக நடிகை காவ்யா மாதவனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.


மேலும் படிக்க | பீஸ்ட்'டுக்கு முன்பாக திடீரென வெளியான KGF:  ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR