பிரபல நடிகை தாரா கல்யாண் சமீபத்தில் ஒரு உணர்வுபூர்வமான வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் அவர் தன்னை தனது மருமகனுடன் தொடர்பு படுத்தி பேசிய இணையவாசிகளுக்கு தக்க பதில் அடி கொடுத்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திரைப்படம், தொலைகாட்சி நிகழ்ச்சி என நடிப்புலகில் பிஸியாக இருந்த மலையாள நடிகை தாரா கல்யான். இவர் மற்றும் இவரது மகள் சௌபாக்யா வெங்கட் இருவரும் சமீப காலமாக டிக் டாக் வீடியோக்களை வெளியிட்டு தங்களுக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உண்டாக்கியுள்ளனர். இவரது வீடியோக்களால் இவரது ரசிகர்கள் எண்ணிக்கை தற்போது பல மடங்கு அதிகரித்துள்ளது எனலாம்.


இந்நிலையில் கடந்த மாதம் 20-ஆம் தேதி தாரா கல்யாணின் மகள் சௌபாக்யா வெங்கட் அவருக்கும் அர்ஜுன் என்பவருக்கும் திருமணம் நடைப்பெற்றது. விதவையான தாரா கல்யாண் இவர்களது திருமணத்தை சீறும் சிறப்புமாக நடத்தி வைத்தார்.


 

 

 

 



 

 

 

 

 

 

 

 

 

 

 

A post shared by Thara Kalyan (@tharakalyan) on


எனினும் இணையவாசிகள், இந்த திருமணத்தை கொச்சைபடுத்தியதோடு தாராவிற்கும்- அர்ஜூனுக்கும் இடையில் கள்ள தொடர்பு இருப்பதாகவும், இதன் காரணமாகவே அர்ஜூனை தனது மகளுக்கு திருமணம் செய்து வைத்ததாகவும் இணையத்தில் செய்திகளை பகிர்ந்து வந்தனர். அதுமட்டும் அல்லாது, தாரா-அர்ஜுன் ஒன்றாக இருக்கும் படியான புகைப்படங்களையும் இணையத்தில் பகிர்ந்து வந்தனர். இணையவாசிகளின் செயல்பாடு ஆனது தாரா குடும்பத்தாரை மட்டும் அல்லாது பலரினை வேதணைக்கு ஆளாக்கியது.


இந்நிலையில் இணையவாசிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் தாரா பேசியதாவது., "பெண்களுக்கு மதிப்பு அளிக்க சற்று கற்றுக்கொள்ளுங்கள். அவர்களும் மனிதர்கள் தான். பெண்மை பற்றி தவறாக பேசும் உங்கள் வீட்டில் பெண்கள் இல்லையா, இல்லை நீங்கள் தான் ஒரு பெண் வயிற்றில் பிறக்கவில்லையா?... ஒரு பெண்ணை வேதணை படுத்தும் அளவிற்கு தான் நீங்கள் வளர்க்கப்பட்டுள்ளீரா?" என சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.


மேலும்., சமூக ஊடகங்கள் ஆனது மிகவும் சக்தி வாய்தது. அதனை நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்துங்கள், மாறாக மற்றவர் குடும்பத்தை கெடுப்பதற்கு பயன்படுத்தாதீர் எனவும் அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.