கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகம் கடந்த 14ஆம் தேதி வெளியானது. பான் இந்திய படமாக வெளியான கேஜிஎஃப் 2க்கு ரசிகர்கள் தங்களது வெறித்தனமான வரவேற்பை கொடுத்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முக்கியமாக ராக்கி பாயின் எழுச்சி வேறு லெவலில் இருந்ததாகவும் தெரிவித்தனர். இன்றுவரை பல திரையரங்குகளில் ஹவுஸ்ஃபுல்லாக கேஜிஎஃப் 2 ஓடிக்கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி கேஜிஎஃப் 2 படத்தின் இறுதியில் மூன்றாம் பாகத்துக்கான லீட் கொடுக்கப்பட்டிருப்பதால் ரசிகர்கள் குஷியில் இருக்கின்றனர்.



இப்படத்தின் வெற்றி மூலம் கதாநாயகன் யாஷுக்கும், இயக்குநர் பிரசாந்த் நீலுக்கும் பயங்கரமான டிமாண்ட் உருவாகியுள்ளது. பிரசாந்த் நீல் அனைத்து மொழிகளிலும் படத்தை இயக்க வேண்டும் என ரசிகர்கள் வலியுறுத்த ஆரம்பித்திருக்கின்றனர்.


மேலும் படிக்க | பீஸ்ட் இயக்குநரை விமர்சிக்கும் தளபதி விஜயின் அப்பா எஸ் ஏ சந்திரசேகர்


இந்நிலையில், கேஜிஎஃப் 2 உலகம் முழுவதும் இதுவரை 700 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படம் வெளியான ஒரு வாரத்திலேயே 700 கோடியை வசூலித்திருப்பதால் விரைவில் ராக்கி பாய் 1000 கோடி ரூபாய் க்ளப்பில் இணையவிருக்கிறார். இதனால் கேஜிஎஃப் ரசிகர்கள் உற்சாகத்தின் உச்சத்தில் இருக்கின்றனர்.


மேலும் படிக்க | கொலை மிரட்டலுக்கு நடிகர்களே காரணம்; விதை கமல் போட்டது - தயாரிப்பாளர் குற்றச்சாட்டு


முன்னதாக, கேஜிஎஃப் இரண்டு பாகங்களின் தயாரிப்பாளர் கார்த்திக் கௌடா, “தங்களது குழு கே.ஜி.எஃப் 3-க்கான முதல்கட்ட வேலைகளை தொடங்கிவிட்டது. விரைவில் அதில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்று அறிவிக்கப்படும்” என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR