Bigg Boss 8 Tamil Update: பிக் பாஸ் ஷோவின் 8 வது சீசன் எப்போது தொடங்கும் என்கிற எதிர்பார்ப்பில் இருக்கும் ரசிகர்களுக்கு தற்போது மிகப்பெரிய அளவில் டுவிஸ்ட் ஒன்று வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிக்பாஸ் 8:
சுமார் 7 சீசன்களை தமிழ் மொழியில் கடந்திருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி, தற்போது, 8வது சீசனை எட்டியிருக்கிறது. கடந்த 7 சீசன்களில் ஒரு சில சீசன்கள் பெரிய ஹிட்டை அடித்திருக்கின்றன. ஒரு சீசன்கள் அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறாமல் இருந்திருக்கிறது. 


புதிய பிக்பாஸ் தொகுப்பாளர்:
பிக்பாஸ் நிகழ்ச்சியில் புதிய தொகுப்பாளராக இணைந்திருப்பவர், நடிகர் விஜய் சேதுபதி. தமிழ் திரையுலகில், துணை கதாப்பாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்து, இன்று பாலிவுட்டிலும், தென்னிந்திய அளவிலும் பெரிய நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றிருக்கிறார். இவர், பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய தொகுப்பாளர் என்ற அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. 


மேலும் படிக்க - தங்கலான் படம் ஓடிடியில் ரிலீஸ்!! எந்த தளத்தில் எப்பாேது முதல் பார்க்கலாம்?


சம்பளம் எவ்வளவு:
நடிகர் விஜய் சேதுபதி, பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கு அவருக்கு கொடுக்கப்படும் சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதில்,அவருக்கு சுமார் ரூ.50 காேடி சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒரு எபிசோடுக்கு சுமார் ரூ.1 கோடி சம்பளமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. 


போட்டியாளர்களின் விவரம்:
இதுவரைக்கும் இல்லாத வகையில் இந்த சீசனில் போட்டியாளர்கள் தேர்வு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அதன்படி இந்த நிகழ்ச்சியில் பாரதி கண்ணம்மா சீரியல் பிரபலம் நடிகர் அருண் கலந்துக் கொள்ளப் போவதாக கூறப்படுகிறது. அவரை தொடர்ந்து டிடிஎஃப் வாசன், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்த ஜோயா கலந்துக் கொள்ளப் போவதாக கூறப்படுகிறது. அதுபோல இந்த நிகழ்ச்சியில் நடிகர் மற்றும் இயக்குனரான பார்த்திபன், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் மாதம்பட்டி ரங்கராஜன் ஆகியோர் கலந்து கொள்வதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


இவர்களை தொடர்ந்து சீரியல் நடிகை பவித்ரா ஜனனி மற்றும் வினோத் பாபுவும் குறிப்பிடுகிறது. இந்த வரிசையில் பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா கேரக்டரில் தற்போது நடித்து வரும் நடிகை அக்ஷிதாவும் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.


எதிர்க்காத விஷயம்:
இந்நிலையில் இந்த முறை யாரும் எதிர்பார்க்காத ஒரு விஷயம் நடக்க உள்ளது. அதன்படி, முந்தைய சீசன்களில் பரபரப்பை ஏற்படுத்திய சில போட்டியாளர்களை மீண்டும் கொண்டு வர குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்த சீசனில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். 


மேலும் படிக்க | நேற்று விவாகரத்து.. இன்று பிறந்தநாள்.. ஜெயம் ரவியின் முழு சொத்து மதிப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ