Actor Ajith Kumar Hospitalized In Chennai News In Tamil : தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக விளங்கும் அஜித்குமார், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கு என்ன காரணம்? இங்கு பார்ப்போம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அஜித்குமார்:


நடிகர் அஜித்குமார் (Ajith Kumar Hospitalized)சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான மருத்துவ பரிசோதனை காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அஜித்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியை கேள்விப்பட்டவுடன் ரசிகர்கள் பதற்றமடைய ஆரம்பித்து விட்டனர். ஆனால், அதன் பிறகு செய்திகள் அனைத்தும் அவருக்கு ஒன்றுமில்லை என்று கூறிய பிறகு, நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.


வழக்கமான மருத்துவ பரிசோதனையில் என்ன நடக்கும்?


குறிப்பிட்ட வயதிற்கு மேலானவர்கள், முழு உடல் பரிசோதனை மற்றும் வழக்கமான மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது வழக்கம். உடலில் என்ன பிரச்சனை இருக்கிறது என்பதையும், அப்படி ஏதேனும் பிரச்சனை இருந்தால் அதை முன்கூட்டியே களைய உதவும் கருவியாகவும் இருக்கிறது, முழு உடல் பரிசோதனை. இதில், வழக்கமாக ரத்த அழுத்தத்தையும், கொழுப்பின் அளவையும் உடல் நிறை குறியீட்டெண் (Body Mass Index), கண் பரிசோதனை, சரும பரிசோதனை, இரத்த பரிசோதனை, பாலியல் தொடர்பான நோய்கள் குறித்த பரிசோதனை, உள்ளிட்டவை பல பரிசோதனைகள் நடைபெறும். 


மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் மருத்துவர் குடும்பத்தில் ஏதேனும் மரபியல் நோய் குறித்து விசாரிப்பார், வாழ்வியல் முறை குறித்தும், உடலில் அசௌகரியமான அறிகுறிகள் ஏதேனும் இருக்கிறதா என்றும் கேட்டு தெரிந்து கொள்வார். நோய் பாதிப்புகள் ஏதேனும் இருக்கிறதா என்பதை கண்டறிய சிறுநீர் பரிசோதனையும் மேற்கொள்ளப்படும். 


மேலும் படிக்க | கொரோனா குமார் படத்தில் இருந்து விலகிய சிம்பு! புதிய ஹீரோ இவரா..?


நடிகர் அஜித் குமாருக்கு தற்போது 52 வயதாகிறது. பொதுவாக, 50 வயதுக்கு மேலான நபர்கள் அனைவரும் முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது வழக்கம். அந்த வகையில்தான் அஜித்குமாரும் தனக்கு பரிசோதனை மேற்கொள்வதற்காக மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார். 


விடாமுயற்சி படப்பிடிப்பு தொடக்கம்..


நடிகர் அஜித்குமார், மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் ஹீரோவாக நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த படத்திலும் அவர் வழக்கமான சால்ட் அண்ட் பெப்பர் தோற்றத்தில் வர இருக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைப்பெற்றது. இதில் நடிகர்கள் அஜித், ஆரவ், அர்ஜுன், இயக்குநர் மகிழ் திருமேனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் த்ரிஷா மற்றும் ரெஜினா கசாண்ட்ரா ஆகியோரும் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவ்வப்போது தனது பைக்கை எடுத்துக்கொண்டு இந்தியா டூர் சென்று கொண்டும் வெளிநாடுகளுக்கு குடும்பத்துடனும் விசிட் அடித்து வந்த அஜித்குமார், சில மாதங்களாகத்தான் படப்பிடிப்புகளுக்கு சென்று வந்தார். வரும் 15ஆம் தேதி விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு வெளிநாட்டில் தொடங்கப்பட இருந்த நிலையில், தற்போது அஜித்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது செய்தி தொடர்பாளர் (PRO) சுரேஷ் சந்திரா தெரிவித்திருக்கிறார். 


மேலும் படிக்க | Suriya : அடடா! சூர்யா பேட்டிங் ஆட..டெண்டுல்கர் பவுலிங் போட.. காணக்கிடைக்காத வைரல் வீடியோ..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ