Jayam Ravi Debut As Director : தமிழ் திரையுலகில் முக்கிய கதாநாயகராக இருப்பவர் நடிகர் ஜெயம் ரவி. திரைப்பட தொகுப்பாளர் ‘எடிட்டர்’ மோகனின் இரண்டாவது மகனான இவர் ஜெயம் படத்தின் மூலமாக அறிமுகமானார். கடந்த சில மாதங்களாக தமிழ் திரையுலகின் ஹாட் டாப்பிக்காகவும் இருக்கிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இயக்குநர் அவதாரம்:


திரையுலகிற்கு வந்து கிட்டத்தட்ட 22 வருடங்கள் ஆகிவிட்டாலும், இன்னும் அதே குறும்புத்தனமும் இளமையும் மாறாமல் இருக்கும் நடிகர் ஜெயம் ரவி. கடந்த சில ஆண்டுகளாக, இயக்குநர்கள் நடிகர்களாக மாறுவதும், ஹீரோக்கள் இயக்குநர்களாக மாறுவதும் வாடிக்கையாகி வருகிறது. கமல்ஹாசன், தனுஷ் உள்ளிட்டோரின் லிஸ்டில் இப்போது நடிகர் ஜெயம் ரவியும் இணைய இருக்கிறார். 


யார் ஹீரோ? 
நடிகர் ஜெயம் ரவி இயக்க இருக்கும் படம் குறித்த தகவல் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தில் இவர் யோகி பாபுவை ஹீரோவாக களமிறக்க இருக்கிறாராம். யோகி பாபுவும் இவரும் சேர்ந்து ஏற்கனவே கோமாளி திரைப்படத்தில் ஒன்றாக நடித்திருக்கின்றனர். 2019ஆம் ஆண்டு வெளியான இப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்றதற்கு முக்கிய காரணமாக அமைந்தது, இவர்கள் இருவரின் காமெடி காம்பாேதான். 


இந்த படத்திற்கு பிறகு சைரன் படத்திலும் இருவரும் ஒன்றாக நடித்தனர். யோகி பாபு, முதலில் காமெடி கதைகளில் ஹீரோவாக நடித்திருந்தாலும் இப்போதெல்லாம் சீரியஸான கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதனால் ஜெயம் ரவி இயக்க இருப்பது காமெடி படமா அல்லது சீரியஸான கதை கொண்ட படத்தை இயக்குறாரா என்பது தெரியவில்லை. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலும் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 



மேலும் படிக்க | ஜெயம் ரவிக்கு நேர்ந்த மாமியார் கொடுமைகள்? அவரே சொன்ன விஷயம்..


ஜெயம் ரவியின் அடுத்த படம்..


நடிகர் ஜெயம் ரவி, பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு நடித்த படங்கள் பெரிதாக வெற்றி பெறவில்லை. இறைவன், சைரன் என இரு படங்களுமே தாேல்வியடைந்தன. இதையடுத்து அவர் ராஜேஷ்.எம் இயக்கிய ‘பிரதர்’ திரைப்படத்தில் நடித்தார். இந்த படம், தீபாவளியை முன்னிட்டு இம்மாதம் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. 


பிரதர் திரைப்படத்தை அடுத்து ஜீனி படத்திலும் ஜெயம் ரவி நடித்திருந்தார். இந்த படத்தில் சில காட்சிகள் சரியில்லாததால் ரீ-ஷூட் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதே போல அவர் நடிக்கும் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் படப்பிடிப்பும் நடைப்பெற்று வருகிறது. 


விவாகரத்து சர்ச்சை..!


நடிகை ஜெயம் ரவி, சில வாரங்களுக்கு முன்பு தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் அவரது மனைவி ஆர்த்தியும், இந்த அறிவிப்பு தன்னை கேட்காமல் வெளியானதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, ஜெயம் ரவிக்கு கெனிஷா என்ற பெங்களூரு பாடகியுடன் தொடர்பு இருப்பதாகவும் இவருக்காகத்தான் தனது மனைவியை அவர் பிரிந்ததாகவும கூறப்பட்டது. ஆனால், அப்படி ஒன்றும் இல்லை என்று கூறி இருவருமே அந்த சர்ச்சைகளை மறுத்தனர். 


ஜெயம் ரவியின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல்வேறு சர்ச்சைகள் இருந்தாலும் அவர் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கிறார். சென்னையில் இருந்து தன் வீட்டை காலி செய்து விட்டு, தற்போது மும்பைக்கு குடியேறி இருப்பதாக கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | டாடா படத்தின் இயக்குனருடன் கைகோர்க்கும் ஜெயம் ரவி! லேட்டஸ்ட் அப்டேட்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ