Aishwarya Rai Bachchan Viral Video : நடிகை ஐஸ்வர்யா ராய், கையில் கட்டுடன் இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அவருடன் அவர் மகள் ஆராத்யாவும் இருக்கிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐஸ்வர்யா ராய்:


எத்தனை பேர், எத்தனை முறை உலக அழகி பட்டத்தை வென்றாலும், அனைவருக்கும் எப்போதும் உலக அழகியாக அறியப்படுபவர், ஐஸ்வர்யா ராய். காந்தமாய் ஈர்க்கும் கண்கள், சொக்க வைக்கும் குரல் என ஐஸ்வர்யா ராயின் ஒவ்வொரு அசைவும் அழகுதான். தமிழில் இருவர் படம் மூலம் அறிமுகமான இவர், தொடர்ந்து ஜீன்ஸ், கண்டுகாெண்டேன் கண்டுகாெண்டேன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இதையடுத்து இந்தி படங்களிலும் தொடர்ந்து நடித்துக்கொண்டிருந்த இவர் பல நாட்களுக்கு பிறகு ராவணன், எந்திரன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். கடைசியாக மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2ஆம் பாகங்களில் நந்தினி கதாப்பாத்திரத்தில் நடித்தார். 


கேன்ஸ் படத்திருவிழா:


வருடா வருடம், திரையுலகினருக்கு பெரிய விழாவாக கருதப்படுவது, Cannes Film Festival. பிரான்ஸில் நடைபெறும் இந்த திருவிழாவில், ஹாலிவுட், பாலிவுட் என பல்வேறு திரையுலகினர் கலந்து கொள்வர். இந்திய திரையுலகின் ஐகானாக திகழும் நடிகை ஐஸ்வர்யா ராயும் இதில் கலந்து கொள்வது வழக்கம். வரும் மே 18ஆம் தேதி நடைபெறும் இந்த விழாவிற்காக தயாரான ஐஸ்வர்யா ராய், இதற்காக நேற்று விமான நிலையம் வரை சென்றார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோதான் தற்போது வைரலாகி வருகிறது. 


மேலும் படிக்க | தொடர்ச்சியாக விவாகரத்து வாங்கும் தனுஷின் நண்பர்கள்! முழு லிஸ்ட் இதோ..


கையில் கட்டு!


கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு போவதற்காக தனது தாய் ஆராத்யாவுடன் காரில் ஏறினார். அப்போது அவரது கையில் கட்டுபோடப்பட்டிருந்தது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருவதை தொடர்ந்து, இதற்கு காரணம் என்ன என்பது குறித்து ரசிகர்கள் அனைவரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். 


விவாகரத்து சர்ச்சை!


நடிகை ஐஸ்வர்யா ராயும், நடிகர் அபிஷேக் பச்சனும் 2007ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். பாலிவுட்டின் பெரிய குடும்பமாக இருக்கிறது, அமிதாப் பச்சனின் குடும்பம். மத்திய அரசின் முக்கிய பொறுப்பில் இருந்து, இந்திய திரையுலகின் முக்கிய நடிகர்கள் என்ற பொறுப்பு வரை பவர்ஃபுலான இடத்தில் இருக்கின்றது, இவர்களின் குடும்பம். அதே சமயத்தில் இவர்கள் மிகவும் கட்டுக்கோப்பான குடும்பம் என்று கூறப்படுகிறது.


 



இதனால், இவர்கள் ஐஸ்வர்யா ராயை நடிக்க விடாமல் தடுப்பதாகவும் கூறப்படுகிறது. பொது வெளியில், ஐஸ்வர்யா ராயை அபிஷேக் பச்சன் ஒரு சில நேரங்களில் சரியாக நடத்தவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்த வீடியோக்களும் இணையத்தில் வைரலானது. இதனால், இவர்கள் பிரிந்து விட்டதாகவும் இவர்களுக்கு விரைவில் விவாகரத்து நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் பரவியது. ஆனால், இதற்கு அவர்கள் இருவருமே பதில் கூறவில்லை. 


தற்போது ஐஸ்வர்யா ராய்க்கு அடிப்பட்டிருக்கும் நிலையில், இது எதனால் ஏற்பட்டது, எப்படி அடிப்பட்டது என்பது குறித்து வாய் திறக்காமல் இருக்கிறார். 


மேலும் படிக்க | பட்டியலின பெண்கள் குறித்து தரக்குறைவாக பேசிய கார்த்திக் குமார்?! லீக் ஆன ஆடியோ…


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ