Suriya 45 Movie Heroine : தமிழ் திரையுலகின் மாஸ் ஹீரோக்களுள் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர், சூர்யா. இவர், தனது 45வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் சமீபத்தில் வெளியானது. 


சூர்யா 45:

 

நடிகர் சூர்யா ஹீரோவாக நடித்த படங்கள், கடந்த 2 ஆண்டுகளில் பெரிதாக வெளியாகவில்லை. ஆனால், அவை மொத்தத்திற்கும் சேர்த்து பெரிய படமாக ரிலீஸாக இருக்கிறது ‘கங்குவா’. இந்த படத்தை அடுத்து அவர் சைன் செய்த படம், சூர்யா 44. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இதையடுத்து அவர் கைக்கோர்த்திருக்கும் புதிய இயக்குநர், ஆர்.ஜே.பாலாஜி. 

சூர்யா 45 படத்தை, ஆர்.ஜே.பாலாஜி இயக்க இருப்பதாக, கடந்த வாரம் அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. அது மட்டுமல்ல, இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஆயுத எழுத்து, சில்லுனு ஒரு காதல், 24 படங்களுக்கு பிறகு சூர்யாவின் படம் ஒன்றிற்கு இசையமைக்க வருகிறார், ஏ.ஆர்.ரஹ்மான். 

 

நாயகி..

 

சூர்யாவிற்கு ஜோடியாக, கங்குவா திரைப்படத்தில் பாலிவுட் நாயகி திஷா பதானி நடித்திருக்கிறார். சூர்யா 44 படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக வருகிறார். அதே போல, சூர்யா 45 திரைப்படத்திலும் ஒரு இளம் நாயகிதான் கதாநாயகியாக இருக்கிறார். அவர் யார் தெரியுமா? 

 

தமிழில், வெகு சில படங்களிலேயே நடித்திருந்தாலும் மிகவும் பிரபலமான ஒருவராக வலம் வருகிறார், காஷ்மிரா பரதேசி. 26 வயது நிரம்பிய இவர், முதல் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷிற்கு ஜோடியாக நடித்திருந்தார். தொடர்ந்து ராம்பாத், மிஷன் மங்கள் உள்ளிட்ட இந்தி  ஒழி படங்களிலும் நடித்தார். கடைசியாக, ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான ‘பிடி சார்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்போது, சூர்யாவின் 45வது படத்தில் இவர் ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலுக்காக ரசிகர்கள் காத்துக்கொண்டுள்ளனர்.

 


 


சூர்யாவின் அடுத்தடுத்த திரைப்படங்கள்..

தமிழில் கொடிக்கட்டி பறக்கும் நடிகர் சூர்யா, சில ஆண்டுகளுக்கு முன்பு தனது குடும்பத்தினருடன் மொத்தமாக மும்பைக்கு குடி பெயர்ந்தார். அதிலிருந்து, பாலிவுட் மீடியாக்களிலும் அடிக்கடி முகம் காட்டி வருகிறார். கங்குவா, சூர்யா 44 மற்றும் சூர்யா 45 படத்திற்கு பிறகும் இவர் நடிக்க இருக்கும் படங்கள் லைன் கட்டி நிற்கின்றன. 

 

இந்தி திரையுலகில் பலரது எதிர்பார்ப்பை தூண்டியிருக்கும் படமாக இருக்கிறது, தூம் 4. இதில் ரன்பீர் கபூர் ஹீரோவாக நடிப்பதாக கூறப்படுகிறது. இதில் வில்லனாக, சூர்யா நடிக்கிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்த பேச்சு வார்த்தை நடைப்பெற்று வருகிறதாம். அதே போல, லோகேஷ் கனகராஜ் எல்.சி.யு-வின் ‘ரோலெக்ஸ்’ கதாப்பாத்திரத்திற்கென தனியாக ஒரு படம் இயக்க இருப்பதாக கூறியிருக்கிறார். கூடிய விரைவில் இந்த படம் குறித்த அறிவிப்பும் வெளியாகலாம். 

 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ