Latest News Vijay Milton : விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகிறது, மழை பிடிக்காத மனிதன் திரைப்படம். இதனை விஜய் மில்டன் இயக்கியிருக்கிறார். இந்த படத்தின் பத்திரிக்கையாளர்களுக்கான ப்ரஸ் ஷோ இன்று நடந்தது. இதையடுத்து, பத்திரிக்கையாளர்களை சந்தித்த விஜய் மில்டன் ஒரு குற்றச்சாட்டை வைத்திருக்கிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மழை பிடிக்காத மனிதன்:


தமிழ் திரையுலகில் ஒளிப்பதிவாளராக இருந்து பின்னர் இயக்குநராக மாறியவர் விஜய் மில்டன். 1997ஆம் ஆண்டில் இருந்து திரையுலகில் வேலை பார்த்து வரும் இவர், அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இதையடுத்து கோலி சோடா படம் மூலம் பெறும் வெற்றி பெற்றார்.


சமீபத்தில் விஜய் ஆண்டனியை வைத்து அவர் இயக்கிய படம்தான், ‘மழை பிடிக்காத மனிதன்’. வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து இயக்கும் அவர், இதிலும் தனது வித்த்தியாசத்தை காண்பித்திருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து சத்யராஜ், சரண்யா பொன்வன்னன், முரளி ஷர்மா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்திருக்கிறார்.


விஜய் மில்டன் பேட்டி..


மழை பிடிக்காத மனிதன் படத்தின் பிரஸ் ஷோ, பிரசாத் லேப்பில் இன்று நடந்தது. இதில் பத்திரிக்கையாளர்களுடன் சேர்ந்து படக்குழுவினரும் படத்தை பார்த்தனர். படம் முடிந்தவுடன் ஊடகத்தினரை சந்தித்த விஜய் மில்டன், தனக்கு தெரியாமல் 1 நிமிட காட்சி படத்தில் இணைக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கும் தனக்கும் சம்மந்தம் இல்லை என்றும் கூறியிருக்கிறார். 


படத்தின் ஆரம்பத்தில் ஹீரோ யார், இவனை சுற்றி ஏன் இப்படி நடக்கிறது என பல்வேறு கேள்விகளுடனேயே கதையை தான் நகர்த்துவது போல இயக்கியதாகவும், தனக்கு தெரியாமல் படத்தின் ஆரம்பத்தில் வைக்கப்பட்டிருக்கும் 1 நிமிட காட்சி அதை மொத்தமாக கெடுத்து விட்டதாகவும் கூறியிருக்கிறார். இதனால், திரையரங்கிற்கு படம் பார்க்க வரும் ரசிகர்கள் அந்த 1 நிமிட காட்சியை மறந்து விட்டு படத்தை பார்க்குமாறு கோரிக்கை விடுத்திருக்கிறார். இது, தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் பேசு பொருளாக மாறியிருக்கிறது. 


மேலும் படிக்க | விஜய் ஆண்டனி அரசியலுக்கு வருவாரா இல்லையா? அவரே கூறிய பதில்!


யார் காரணம்? 


படத்தின் ஃபைனல் கட்டிற்கு பிறகு, அதில் எந்த காட்சிகளையும் கூட்ட முடியாது என கூறப்படுகிறது. அது மட்டுமன்றி, அனைத்து வேலைகளும் முடந்து சென்சார் போர்டிடம் சர்டிஃபிகேட் வாங்கிய படத்தில் எப்படி இந்த காட்சி இயக்குநருக்கு தெரியாமல் இயக்கப்பட்டிருக்க முடியும் என்ற கேள்வியும் கேட்கப்பட்டு வருகிறது. அதே போல, இந்த காட்சியை இயக்குநரின் அனுமதி இன்றி யாருக்கும் சேர்க்க உரிமை இல்லை என்றும் கூறப்படுகிறது. இதனால், இதற்கு யார் பொறுப்போ அவர் விரைவில் வாய் திறப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


ப்ரமோஷனாக இருக்குமாே? 


சமீப காலங்களாக தங்களது படங்களை வித்தியாசமாக ப்ரமோஷன் செய்வது பிரபலங்களின் வாடிக்கையாகி வருகிறது. ஒரு சில பிரபலங்கள் தாங்கள் திருமணம் செய்து கொண்டது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு பின்பு அது படத்திற்காக என்று கூறுகின்றனர். அதே போல, ஒரு சிலர் வேண்டுமென்றே தேவையற்ற கேமரா ஸ்டண்ட்ஸ்களை செய்து அதையும் ப்ரமோஷனாக மாற்றிக்கொள்கின்றனர். அப்படி, தற்போது விஜய் மில்டன் கூறியிருக்கும் விஷயமும் அப்படிப்பட்ட ப்ரமோஷனாக இருக்குமோ என சந்தேகிக்கப்படுகிறது.  


மேலும் படிக்க | புதுவித கெட்டப்பில் விஜய் ஆண்டனி! எந்த படத்திற்கு தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ