Adhu Idhu Yedhu New Promo Starring Ma Ka Pa Anand : தளபதி நடிகரின் பெயரைக்கொண்ட தொலைக்காட்சியில், சில வருடங்களுக்கு முன்னர் ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சிகள் பல, சூப்பர் ஹிட் அடித்திருக்கின்றன. தற்போதும் அந்த டிவி சேனலுக்கு பல லட்சம் பார்வையாளர்கள் இருந்தாலும், பலருக்கு பிடித்த ஷோ எது என்று கேட்டால் அதில் பெரும்பாலானோர், பழைய ஷோக்களின் பெயரைத்தான் குறிப்பிடுவர். அப்படி, 10 ஆண்டுகளுக்கு முன்பு பெரிதாக ஹிட் அடித்த ஷோ ஒன்று, மீண்டும் தொடங்க உள்ளதாக அந்த தொலைக்காட்சி ஒரு ப்ரமோ வீடியோவை வெளியிட்டிருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதிதாக வெளியான ப்ரமோ..


“மாகாபா சொன்ன சீக்ரெட் என்ன?” என்ற பெயரில் புதிய ப்ரமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் மாகாபா சலூனுக்கு செல்ல, அங்கிருப்பவர் ‘அது போல கட் வேனுமா..இது போல கட் வேனுமா…” என கேட்க, அதற்கு மாகாபா, “அது ஒரு சீக்ரெட் டா..” என்கிறார். அதனால், இந்த ப்ரமோ ‘அது இது எது’ நிகழ்ச்சிக்கான ப்ரமாேவாக இருக்குமோ என ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். 



சூப்பர் ஹிட் ஷோ-அது இது எது!


செல்போன் மோகமும் இணையதளத்தில் எழுச்சியும் இல்லாமல் இருந்த காலத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல நிகழ்சிகள், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தன. அப்படி, மக்களுக்கு புதுமையான வகையில் மகிழ்ச்சியையும், சிரிப்பையும் பரப்பிய நிகழ்ச்சிகளுள் ஒன்று, அது இது எது. இந்த நிகழ்ச்சி, 2009ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதனை, நடிகர் சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கினார். சொல்லப்பாேனால், அவரை தமிழக மக்கள் அனைவரும் ‘ஆங்கர் சிவகார்த்திகேயனாக’ தெரிந்து கொள்ள பெரிய காரணமாக அமைந்த நிகழ்ச்சி, இதுதான். 


மேலும் படிக்க | வருங்கால கணவரை கலாய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த வரலட்சுமி! என்ன சொன்னார் தெரியுமா?


‘அது இது எது’ நிகழ்ச்சி மூலமாகத்தான், சிவகார்த்திகேயனுக்கு பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க வாய்ப்பு கிடைத்தது. இதிலிருந்துதான் அவர் சினிமாவிற்கும் சென்றார். இவர் தொகுத்து வழங்கிய போது, அப்போது பிரபலமாக இருந்த பல்வேறு நடிகர்களும் திரையுலக கலைஞர்களும் கலந்து கொண்டனர். 


சீசன் 2-வில் மாகாபா ஆனந்த்:


சிவகார்த்திகேயன், ‘அது இது எது’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி கொண்டிருந்த போது, அவர் துணை நடிகராக நடிதத் 3 படமும், ஹீரோவாக நடித்த ‘மெரினா’ படமும் வெளியானது. இரண்டு படங்களும் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, அவரால் இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராக தொடர முடியாமல் போனது. இதையடுத்து, அப்போதுதான் புதிதாக வந்திருந்த மாகாபா ஆனந்தின் கைக்கு இந்த ஷோ மாறியது. தான் கடைசியாக கலந்து கொண்ட அது இது எது எபிசோடில் சிவகார்த்திகேயன் விருந்தினராக கலந்து கொண்டு, விடை பெற்றுகொண்டார். இப்போது சினிமாவில் அவர் எந்த உயர்த்தில் இருக்கிறார் என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை. 


மாகாபா ஆனந்த் தொகுத்து வழங்கிய அது இது எது நிகழ்ச்சியும் மக்களுக்கு பிடித்திருந்தது. இதையடுத்து இந்நிகழ்ச்சி 2019ஆம் ஆண்டு வரை நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சி இப்போதும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் செய்யப்படும் நிகழ்ச்சியாக இருப்பதாக கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | ஆஸ்கர் சர்ச்சைகள்: ஒவ்வாெரு வருடமும் ஒவ்வொரு பஞ்சாயத்து..இந்த வருடம் என்ன ஆச்சு தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ