Latest News Miruthan 2 : தமிழ் திரையுலகில் கவனிக்கத்தக்க நடிகராக வலம் வருபவர், ஜெயம் ரவி. ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமான இவரது தந்தையும், அண்ணனும் சினிமாவை தொழிலாக கொண்டவர்கள். இப்படி, திரையுலக குடும்பத்தில் இருந்து வந்த இவர், தன் கோலிவுட் வாழ்க்கையின் ஆரம்பத்தில் இருந்தே வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து வருகிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மிருதன் திரைப்படம்:


தமிழில் மட்டுமன்றி, தென்னிந்திய மொழிகளில் முதன் முதலில் ஜாம்பி கதையை வைத்து வெளியான படம், மிருதன். ஹாலிவுட்டில் எத்தனையோ படங்களும் தாெடர்களும் இதை வைத்து எடுக்கப்பட்டு இருந்தாலும், இந்தியாவில் இது புதுக்கதைதான். காரணம், இது போன்ற கதைகளை இங்கிருக்கும் மக்கள் பெரிதாக விரும்புவதில்லை. அப்படியிருக்கையில், 2016ஆம் ஆண்டு வெளியான மிருதன் திரைப்படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது.


சக்தி சௌந்தர் ராஜன் இயக்கிய இந்த படத்தில் ஜெயம் ரவி காவல் அதிகாரி வேடத்தில் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக லக்ஷமி மேனன் நடிக்க, இவர்களுடன் இணைந்து குழந்தை கதாப்பாத்திரமாக அனேகா சுரேந்திரனும், ஜெயம் ரவியின் நண்பர் கதாப்பாத்திரத்தில் காளி வெங்கட்டும் நடித்திருந்தனர். இவர்களை தவிர, படத்தில் ஆர்.என்.ஆர் மனோகர், ஜீவா ரவி, ஸ்ரீமான், அமித் பார்கவ் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். 54 நாட்களுக்குள் எடுக்கப்பட்ட இந்த படம், விமர்சனத்திலும் பாக்ஸ் ஆபிசிலும் நல்ல வரவேற்பினை பெற்றது. 


கதை:


ஊட்டியில் இருக்கும் ஒரு ரசாயன ஃபேக்டரியில் இருந்து வெளியேறும் கழிவால் வித்தியாசமான ஜாம்பி நோய் பரவ ஆரம்பிக்கிறது. இந்த நோய் ஒருபுறம் பரவிக்கொண்டிருக்க, காவல் அதிகாரியான ஜெயம் ரவி, மருத்துவரான லக்‌ஷ்மி மேனனை ஒரு தலையாக காதலித்து வருகிறார். நிலைமை முற்றிப்போக, ஜாம்பிக்கள் ஊர் முழுவதும் பரவ ஆரம்பிக்கிறது. அதே சமயத்தில் ஹீரோவின் தங்கையும் காணாமல் போகிறார். இப்படி விறுவிறுப்பான கதைக்களம் கொண்ட இந்த படத்தை, சினிமா ரசிகர்கள் அப்போது ரசிக்கத்தான் செய்தனர். 


மேலும் படிக்க | Jayam Ravi: நடிகர் விஜய்யின் தவெக கட்சிக்கு ஆதரவா? ஜெயம் ரவி பதில்!


தங்கையை கண்டு பிடித்து மருத்துவர் குழுவுடன் வேறு இடத்திற்கு தப்பிச்செல்லும் ஹீராேவுக்கு, அங்கும் சவால் காத்துக்கிடக்கிறது. க்ளைமேக்ஸில் ஹீரோவையும் ஜாம்பி கடித்து விட, ஹீரோயினை காப்பாற்றி விட்டு ஜாம்பியாக மாறிவிடுகிறார். ஆனால் க்ளைமேக்ஸில் ஜெயம் ரவி சென்னைக்கு செல்லும் பஸ்ஸில் ஏறி கத்துவது போன்று முடிக்கப்பட்டு இருந்தது. இரண்டாம் பாகத்திற்கான ஹிண்ட் உடன் இப்படம் முடிக்கப்பட்டு இருந்ததால் விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. 



மிருதன் 2:


முதல் பாகம் வெளியாகி சுமார் 8 ஆண்டுகள் கழித்து மிருதன் படத்தின் 2ஆம் பாகம் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையும் சக்தி சௌந்தர் ராஜன்தான் இயக்க இருப்பதாகவும் ஹீரோவாக ஜெயம் ரவி நடிப்பதாகவும் கூறப்படுகிறது. சில முன்னணி நடிகர்களை இதில் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடைப்பெற்று வரும் நிலையில், இதில் லக்ஷமி மேனன் ஹீரோயினாக இருப்பாரா என்பது தெரியவில்லை. காரணம், அவர் கடந்த சில ஆண்டுகளாகவே பெரிதாக சினிமா உலகில் ஆக்டிவாக இல்லை. இதனால் வேறு புது நடிகையையும் இதில் நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்யலாம் என கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | நடிகர் ஜெயம் ரவிக்கு விவாகரத்தா? புகைப்படங்களை நீக்கிய மனைவி..என்ன ஆச்சு?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r