Actor Hiphop Tamizha Adhi About OTT Platforms : கோவை ப்ரூக்ஃபீல்ட்ஸ் மாலில் PT SIR திரைப்பட பிரமோஷனுக்காக வருகை தந்த அத்திரைப்படத்தின் ஹீரோ ஹிப் ஹாப் ஆதி மற்றும் படக்குழுவினர் ரசிகர்களை பார்த்து கலந்துரையாடினர். அப்போது ஹிப்ஹாப் ஆதி கோவை Anthem பாடலையும், வாடி புள்ள வாடி பாடலையும் பாடினார். இதனால் உற்சாகமடைந்த ரசிகர்கள் அவருடன் இணைந்து பாடல்களை பாடினர். பின்னர் அவருடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிகழ்வில்  செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஹிப் ஹாப் ஆதி,  இப்படத்தின் பிரமோசனுக்காக சுற்றி கொண்டே இருப்பதால் யாரும் தூங்கவில்லை அதனால் பார்ப்பதற்கு ஜாம்பி போல் இருக்கிறோம்,  இருந்தாலும் உள்ளுக்குள் எனர்ஜியாக இருப்பதாக கூறினார். இந்த படம் காமெடி படமாக இருந்தாலும் சீரியஸான விஷயத்தை இப்படத்தில் வைத்திருப்பதாக தெரிவித்தார். பெரிய நட்சத்திர நடிகர் சிறிய நட்சத்திர நடிகர் என்றெல்லாம் இல்லாமல் படம் நன்றாக இருந்தால் ஓடும் என தெரிவித்தார்.


மேலும் படிக்க | ஜெயிலர் 2 படத்தில் ரஜினி கேட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா? கேட்டா ஆடிப்போவீங்க..


ஓடிடி குறித்தான கேள்விக்கு, அதுவும் ஒரு நல்ல ரீச்சை தருகிறது எனவும் திரையரங்குகளில் திரைப்படம் ஓடி முடிந்த பிறகும் பொதுமக்கள் ஓடிடியில் பார்க்கின்ற வாய்ப்பு கிடைக்கிறது என்றார்.  அதேசமயம் ஓடிடியில் பார்த்துக் கொள்ளலாம் என்ற மனநிலை இருப்பதால் திரையரங்குகளுக்கு வருகின்ற மன நிலையும் சிறிது குறைந்துள்ளது எனவும் அது சரியா தவறா என்பதை தற்போது கூற முடியாது  இன்னும் சில ஆண்டுகள் போக என்ன ஆகப் போகிறது என்பதை பார்க்கலாம் என தெரிவித்தார். 


இதில் பேசிய இயக்குநர் கார்த்திக் இப்படம் பெண்களுக்கு பிடிப்பதாக கூறுகின்றனர். பெண்களுக்கு ஏற்படும் வன்கொடுமைகளுக்கு பிறகு என்ன நடக்கிறது என்பது அவர்களுடைய மனநிலை எப்படி இருக்கிறது என்பதுதான் இந்த படம் என்றார். மக்கள் தற்பொழுது திரைப்படத்தை பிரித்துப் பார்க்க ஆரம்பித்து விட்டனர் என தெரிவித்த அவர் கதை நன்றாக இருந்தால் குடும்பத்துடன் திரையரங்குகளுக்கு வந்து பார்க்கிறார்கள் என தெரிவித்தார். 


செய்தியாளர் சந்திப்பின் இடையே அங்கு வந்த இளம் பெண் ஒருவர் ஹிப் ஹாப் ஆதியை பார்த்தவுடன் தேம்பி தேம்பி அழுதார். ஹிப்ஹாப் ஆதியை பார்க்க வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை என அந்த இளம்பெண் கூறினார். 


ஆரம்பத்தில், தனியாக இசையமைத்து பாடல் ஆல்பங்களை வெளியிட்டு வந்தார், ஆதி. இணையதளம் வளர்ந்து வந்த காலம், இவருக்கும் வளர்ச்சியை கொடுக்க, அனிருத்துடன் நட்பு ஏற்பட்டு பின்பு அவருடன் சில படங்களில் இணைந்து வேலை பார்க்க தொடங்கினார். இதையடுத்து, தன் கதையை படமாக எடுத்து அதற்கு ‘மீசைய முறுக்கு’ என பெயர் வைத்து, அப்படத்தையும் ஹிட் ஆக்கினார். ஒரு பக்கம் இசையமைத்துக்கொண்டும், இன்னொரு பக்கம் படங்களில் நடித்துக்கொண்டும் வரும் இவர், ஓடிடி தளங்கள் குறித்து பேசியிருப்பது வைரலாகி வருகிறது.


மேலும் படிக்க | PT Sir Review: ஹிப்ஹாப் ஆதி நடித்துள்ள பிடி சார் படம் எப்படி உள்ளது? திரை விமர்சனம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ