Latest News Naga Chaitanya And  Sobhita Dulipala Engagement : தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் நாக சைதன்யா. நாகார்ஜுனின் மகனான இவர், தமிழிலும் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்து வைத்திருக்கிறார். இவருகும், நடிகை சோபிதா துலிபலாவிற்கும் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாகசைதன்யா-சோபிதா நிச்சயதார்த்தம்:


டோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நாக சைதன்யா. இவர், நடிகை சமந்தாவை 2017ஆம் ஆண்டு கரம் பிடித்தார். இவர்களின் காதல் திருமணம் 2021ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிய, தற்போது இன்னொரு நடிகையை அவர் திருமணம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. தமிழில் பொன்னியின் செல்வன் உள்பட சில படங்களில் நடித்தவர் சோபிதா துலிபலா. இவரும் நாக சைதன்யாவும் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து, இவர்களுக்கு இன்று (ஆகஸ்டு 8) அவர்களது இல்லத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.


சமந்தாவிற்கு ரிவஞ்சா?


நடிகை சமந்தா, சில மாதங்களுக்கு முன்னர், தனது திருமண ஆடையை முற்றிலும் மாற்றி, வேறாக வடிவமைத்து வெள்ளை நிறத்தில் இருந்த துணியை கருப்பு நிறத்தில் மாற்றினார். இந்த நிலையில், இன்றைய தினம் சமந்தாவிற்கு நாக சைதன்யா திருமணத்திற்கு ப்ரப்போஸ் செய்த தினம் என கூறப்படுகிறது. அதே தினத்தை தற்போது தனது புதிய உறவை தொடங்குவதற்காக அவர் இந்த நாளை தேர்ந்தெடுத்து திருமண நிச்சயதார்த்தத்தை வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால், சமந்தா திருமண ஆடையை மாற்றியதால் ரிவஞ்ச் எடுக்கும் நோக்கில் நாக சைதன்யா இதை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. 


ரியாக்‌ஷன் என்னவாக இருக்கும்?


சமந்தா, இதுவரை நாக சைதன்யாவின் திருமண நிச்சயதார்த்தம் குறித்து எதுவும் போடவில்லை. இவர் இது குறித்து ஏதேனும் பேசுவாரா என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். அதே போல, நாக சைதன்யாவின் திருமண நிச்சயதார்த்தம் குறித்த அதிகாரப்பூர்வ தகவலும் இன்னும் வெளியாகவில்லை. 


மேலும் படிக்க | சமந்தா-நாக சைதன்யா பிரிவிற்கு காரணம் என்ன? பல நாள் கழித்து மனம் திறந்த சமந்தா!


நாக சைதன்யா-சமந்தா காதல்:


நடிகை  சமந்தாவும் நாக சைதன்யாவும் பல படங்களில் ஒன்றாக நடித்திருக்கின்றனர். இருவருக்கும், விண்ணை தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீ-மேக்கிதான் முதல் படம். அதன் பிறகு, இருவருக்கும் காதல் மலர, 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். ஆரம்பத்தில் நன்றாக சென்று கொண்டிருந்த இவர்களின் திருமண வாழ்க்கையில் சில மாதங்களிலேயே புயல் வீச தொடங்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து இருவருக்கும் 2021ஆம் ஆண்டு விவாகரத்து நடந்தது. விவாகரத்திற்கு பிறகு, இருவரும் பொது நிகழ்ச்சிகளில் பார்த்துக்கொண்டால் கூட யாரோ போல செல்வதை பார்க்க முடிந்தது. சமந்தா, இன்னும் நாக சைதன்யா மீது பாசம் குறையாமல் இருப்பதாகவும், ஆனால் நாக சைதன்யாதான் அதற்குள் வேறு ஆளை பார்த்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால், ரசிகர்கள் பலர் இது குறித்த தங்களது கருத்துகளை கூறி வருகின்றனர். 


நெடுநாட்களாக டேட்டிங் செய்த சோபிதா-நாக சைதன்யா:


சோபிதவும் நாக சைதன்யாவும் கடந்த சில ஆண்டுகளாகவே டேட்டிங் செய்து வருவதாக கூறப்படுகிறது. இவர்கள் வெளி நாடுகளில் ஷாப்பிங் செய்த போட்டோக்கள் பல இணையத்தில் வைரலாகின. இவர்களின் டேட்டிங் வதந்திகள் கடந்த சில ஆண்டுகளாகவே இணையத்தில் பரவி கிடக்கின்றன. 


மேலும் படிக்க | நாக சைதன்யா கொடுத்த கிஃப்ட்..ஆடிப்போன சமந்தா! என்ன தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ