Latest News Prashanth Second Marriage : கோலிவுட் திரையுலகில், ஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்த நாயகன் பிரசாந்த். ஐஸ்வர்யா ராயுடன் ‘ஜீன்ஸ்’ திரைப்படத்தில் சேர்ந்து நடித்த போது தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக இருந்த இவர், சில காரணங்களால் மார்கெட் இழந்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உச்ச நட்சத்திரமாக விளங்கிய பிரசாந்த்…


தமிழில் பிரபலமான இயக்குநராகவும் நடிகராகவும் இருப்பவர், தியாகராஜன். இவரது மகன் பிரசாந்த் 17 வயதிலேயே வைகாசி பொறந்தாச்சு படத்தில் கதாநாயகனாக நடித்து அறிமுகமானார். ஆரம்பத்தில் அவர் நடித்த படங்கள் சில, அவரை சறுக்கலில் விட்டாலும் தொடர்ந்து எழுந்து தான் நடித்த படங்களை ஹிட் அடிக்க வைத்தார். மணி ரத்னமின் முதல் படமான ‘திருடா திருடா’ படத்தின் நாயகனே இவர்தான். 90களில் இருந்து 2000 வரை இவர் நடித்த கண்ணெதிரே தோன்றினாள், காதல் கவிதை, ஜோடி, பார்த்தேன் ரசித்தேன் உள்ளிட்ட படங்கள் மெகா ஹிட் அடித்தன. இதையடுத்து, டாப் ஹீரோவாகவும் உருவானார். 


ஷங்கர் இயக்கத்தில், இவர் நடித்திருந்த ஜீன்ஸ் திரைப்படம் பெரும் வெற்றியை தாெடர்ந்து இவர் மெகா நட்சத்திரமாக வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், காலம் இவருக்கு வேறு கணக்கை போட்டு வைத்திருந்தது. 


மேலும் படிக்க | Dhanush : 40 வயதில் நடிகர் தனுஷிற்கு 2வது திருமணம்!? மணப்பெண் ‘இப்படி’ இருப்பாராம்..


பல ஆண்டுகளுக்கு பிறகு கம்-பேக்..


நடிகர் பிரசாந்த், ஃபீல் குட் படங்களில் நடித்து வந்தாலும் அவ்வப்போது ஆக்ஷன் படங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். ஆனால், இவை பெரிதும் மக்கள் ஈர்க்கவில்லை. ஒரு கட்டத்தில் இவருக்கு பட வாய்ப்புகளும் குறைந்து போனது. கூடவே, 2009ஆம் ஆண்டு கிரகலக்ஷமி எனும் பெண்ணை திருமணம் செய்து கொண்ட இவர், தனது தனிப்பட்ட வாழ்வில் ஏற்பட்ட பிரச்சனைகளின் காரணமாகவும் பாதிக்கப்பட்டார். இதையடுத்து இவருக்கு விவாகரத்தும் நடந்து விட்டது. இந்த நிலையில், திரையுலகில் இருந்து சற்று விலகி வந்த அவர், சில நாட்களுக்கு முன்பு வெளியான ‘அந்தகன்’ திரைப்படம் மூலம் கம்-பேக் கொடுத்தார். 


அந்தகன் படத்தின் வெற்றிவிழா..


அந்தகன் படத்தின் படம், படப்பிடிப்பு முடிந்து சில ஆண்டுகள் ஆகியும் ரிலீஸ் செய்யப்படாமல் இருந்தது. ஒரு வழியாக கடந்த 9ஆம் தேதிதான் தியேட்டர்களில் வெளியானது. ஏற்கனவே இந்தியில் வெளியான ‘அந்தாதுன்’ படத்தின் ரீ-மேக் என்பதால் படத்தின் கதை, பெரும்பாலான ரசிகர்களுக்கு தெரிந்திருந்தது. இருப்பினும், படம் நல்ல விமர்சனங்களை பெற்று வசூலையும் குவித்தது. இப்படத்தின் வெற்றிவிழா சமீபத்தில் நடந்தது. அதில், இயக்குநரும் நடிகருமான கே.எஸ்.ரவிகுமாரும், தியாகராஜானும் பிரசாந்தின் இரண்டாம் திருமணம் பற்றி பேசினர். 


இரண்டாம் திருமணமா? 


கே.எஸ் ரவிக்குமார், “அடுத்து பிரசாந்திற்கு திருமணம்தான்..” என்று கூற, உடனே அதற்கு பிரசாந்த் வெட்கப்பட்டு சிரித்தார். இது வைரலானது. இவ்விழாவில் பேசிய அவரது தந்தையும், திருமணம் குறித்து பேசினார். இவர் குறித்து தானும் தனது மனைவியும் மிகுந்த கவலை கொள்வதாகவும், தன் மகனுக்கான நல்ல வரனை தற்போது பார்த்து வருவதாகவும் கூறினார். சீரியஸாக வரன் பார்க்க தொடங்கியிருப்பதாகவும், நல்ல பெண் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்றும் தெரிவித்தார். அப்போதும் பிரசாந்த் வெட்கப்பட்டு சிரித்தார். இது சமூக வலைதளங்களில் வைரலானது. இதைத்தொடர்ந்து பலரும் பிரசாந்திடம் “எப்போ கல்யாணம்..?” என்று கேட்டு வருகின்றனர். நடிகர் பிரசாந்த், தற்போது விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்திலும் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்திருக்கிறார்,


மேலும் படிக்க | ‘அந்தகன்’ படத்தில் நடிக்க பிரசாந்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு? அவரே சொன்ன பதில்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ