இயக்குனர் ஷங்கர் இயகத்தில் சூப்பர்ஸ்டார் ரஜிகாந்த் மூன்றாவது முறையாக இணைந்து பணிபுரியும் இந்தப் படத்தில் ஹிந்தி நடிகர் அக்ஷய் குமார் நடிக்கிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் நேற்று 2.0 பட வெளியீட்டைப் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டனர். அதன்படி படம் 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.


லைக்கா நிறுவனம் சார்பாக அதன் கிரியேட்டிவ் ஹெட், ராஜு மகாலிங்கம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 


“லைக்கா புரொக்ஷன்ஸ், ரஜினிகாந்த், அக்ஷய் குமார், ஷங்கர் ஆகியோரின் சயின்ஸ் பிக்ஷன் ஆக்ஷன் த்ரில்லர் படமான 2.0 படம் ஏப்ரல் மாதம் உலகம் முழுவதும் திரையிடப்படும்.நாட்டின் அதிகப் பொருட்செலவிலான 3 டி படமான இப்படத்தில் ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் நடிக்க, ஷங்கர் இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். உயர்தரமான இறுதிக்கட்ட தொழில்நுட்ப வேலைகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. வெளியீட்டிற்கான பணிகளில் படக் குழுவினர் தயாராக உள்ளனர்,” என்று தெரிவித்துள்ளார்.



அதே சமயம், படத்தின் டீசர், டிரைலர் வெளியீடு குறித்து அந்த அறிக்கையில் எதுவும் தெரிகுரவிக்கப்படவில்லை.