மலையாள பட நாயகி மைதிலி தன்னுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார் தயாரிப்பாளர் கிரண் குமார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சினிமா தயாரிப்பாளர் கிரண் குமார் மற்றும் நடிகை மைதிலி இருவரும் நெருக்கமாக இருந்தனர். ஆனால், கிரண் ஏற்கனவே திருமணமானவர் என்பதை அறிந்த நடிகை மைதிலி அவர் விட்டு பிரிந்து விட்டார் என தகவல் வந்தது.
 
இந்நிலையில், தயாரிப்பாளர் கிரண் குமார் "நாம் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் தன்னிடம் உள்ளதாகவும், எனக்கு பணம் தேவை. நீ பணம் தரவில்லை எனில், புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் என நடிகை மைதிலியை மிரட்டி உள்ளார்.


தயாரிப்பாளர் கிரண் மிரட்டலை கண்டுகொள்ள வில்லை நடிகை மைதிலி. இதனால் ஆத்திரம் அடைந்த தயாரிப்பாளர் கிரண், அரை நிர்வாணமாக இருக்கும் சில படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். 


இதனையடுத்து, அதிர்ச்சியடைந்த மைதிலி உடனே கேரளா போலீசாரிடம் புகார் அளித்தார். தயாரிப்பாளர் கிரணை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் இதைக்குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.