Manjummel Boys Director Chidambaram S Poduval Metoo allegations Latest News : கடந்த மாதம் 22ஆம் தேதி வெளியாகி தற்போது தமிழகத்தில் நல்ல வசூலை பெற்றுவரும் படம், ‘மஞ்சுமெல் பாய்ஸ்’. மலையாளம் மற்றும் தமிழ் மொழியில் உருவாகியிருந்த இப்படம், உண்மை சம்பவங்களை வைத்து எடுக்கப்பட்ட படம் ஆகும். 2006ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்திருந்த கேரள நண்பர்கள் சந்தித்த ஒரு நிகழ்வை வைத்துதான் படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தை சிதம்பரம் எஸ்.பொடுவல் இயக்கியிருந்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

#Metoo-வில் சிக்கினார்..


பாலியல் வன்புனர்விற்கு ஆளாக்கப்படும் பெண்கள், #Metoo என்ற ஹேஷ்டேக்கில் தங்களுக்கு நேர்ந்த பாலியல் சீண்டல்கள் குறித்தும், சில சமயங்களில் அப்படி செய்தது யார் என்பது குறித்தும் பேசுவர். அப்படி, இன்ஸ்டாகிராமில் பிரபலமாக உள்ள பிராப்தி எலிசபத் என்பவர், மஞ்சுமெல் பாய்ஸ் பட இயக்குநர் சிதம்பரம், பாலியல் வன்புனர்வு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.


மஞ்சுமெல் பாய்ஸ் படம் ஹிட் ஆனதை தொடர்ந்து, “மஞ்சுமெல் பாய்ஸ் என பெயர் வைப்பது ஏன், மஞ்சுமெல் கேர்ள்ஸ் என இருக்க கூடாதா?” எனக்கேட்டு, 2 நாட்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவர் பதிவினை வெளியிட்டிருந்தர். இந்த பதிவில்தான் பிராப்தி எலிசபத், சில கமெண்ட்ஸ்களை வெளியிட்டிருக்கிறார்.


நடிகை கூறியது என்ன? 


இன்ஸ்டாகிராமில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட ஃபாலோவர்ஸ்களை கொண்டுள்ளவர், பிராப்தி எலிசபத். இவர்தான் தற்பாேது மஞ்சுமெல் பாய்ஸ் பட இயக்குநர் குறித்த கமெண்ட்ஸ்களை வெளியிட்டுள்ளார். அதில், “இந்த இயக்குனர் பற்றியும் அவரது ஆண் நண்பர்கள் பற்றி நான் சொல்லக்கூடிய விஷயங்கள்...அப்பப்பா..” என்று பதிவிட்டிருக்கிறார். அதற்கு சிலர் பதில் கமெண்ட் செய்ய, அதற்கு அவர், இயக்குநர் இதற்கென்று தனியாக வாட்ஸ் ஆப்பில் மெசஜ் செய்வதாக கூறியிருக்கிறார். இவரது இந்த கமெண்ட், பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. 


மேலும் படிக்க | Manjummel Boys: 100 கோடி வசூலை தாண்டிய மஞ்சுமெல் பாய்ஸ்! தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடியா?



ஏற்கனவே சிதம்பரம் படத்தில் நடித்தவர்..


மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் இயக்குநர் சிதம்பரம் இதற்கு முன்னரும் சில படங்களை இயக்கியுள்ளார். அதில் ஒன்றுதான், ஜான்.ஈ.மான். இந்த படத்தில் பிராப்தி எலிசபத் நடித்திருக்கிறார். இப்படம், 2021ஆம் ஆண்டில் வெளியானது. இதில் பேசில் ஜோச, பாலு வர்கீஸ், அர்ஜுன் அசோகன், ரியா சாய்ரா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்ற இப்படத்தில் பிராப்தி எலிசபத் ‘அம்மு’ என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். 


பிராப்தியின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு இயக்குநரின் தரப்பில் எந்த பதிலும் வெளியாகவில்லை. ஒருவர் வளர்ந்தவுட் இவ்வாறு அவர் மீது #Metoo குற்றச்சாட்டுகளை வைப்பது வழக்கமாகி விட்டது என்று ஒரு சில ரசிகர்கள் கூற, இன்னும் சிலர் “இப்போ யாரையுமே நம்ப முடியவில்லையே..” என்று கூறி வருகின்றனர். 


மேலும் படிக்க | ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ உண்மை கதை என்ன? குணா குகையில் அப்படி என்னதான் நடந்தது?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ