தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா, பல ஆண்டுகளாக தனது படங்களின் ப்ரமோஷன் விழக்களில் கலந்து கொள்வதில்லை. புதிதாக வந்துள்ள ஒரு நடிகையும், தற்போது நயன்தாராவின் வழியில் நடக்க ஆரம்பித்துள்ளார். அவர் யார் தெரியுமா? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மிருணாள் தாகூர்:


இந்தி சீரியல்களில் நடித்து திரையுலகிற்குள் எண்ட்ரி கொடுத்தவர், மிருணாள் தாகூர். இவர், கும் கும் பாக்யா என்ற தொடரில் முக்கிய கதாப்பாத்திரமாக வந்தார். இத்தொடர் தமிழில் ‘இனிய இரு மலர்கள்’ என்ற பெயரில் ஒளிபரப்பாகி வந்தது. சில இந்தி படங்களில் துணை கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த இவர், அப்படியே மெயின் கேரக்டர்களில் நடிக்க தொடங்கினார். கடந்த ஆண்டு தெலுங்கு மற்றும் தமிழ் மொழியில் வெளியான ‘சீதா ராமம்’ படத்தில் நாயகியாக நடித்து தென்னிந்திய அளவில் பிரபல நடிகையாக அறியப்பட்டார். 


தற்போது இவர், பிரபல தெலுங்கு நடிகர் நானிக்கு ஜோடியாக ‘ஹை நன்னா’ எனும் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ப்ரமோஷன் விழாக்கள் நடைப்பெற்று வருகின்றன. ஆனால், இதுவரை நடைப்பெற் ஒரு ப்ரமோஷன் விழாவில் கூட மிருணாள் தாகூர் கலந்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது. ஹை நன்னா படத்தின் நாயகன் நானியும் அவருக்கு மகளாக நடித்துள்ள குழந்தை நட்சத்திரமான கியாரா கஹானாவும் மட்டும் அனைத்து விழாக்களிலும் கலந்து கொண்டு வருவதாக கூறப்படுகிறது. 


படத்தின் ப்ரமோஷன் விழாக்கள் நடைபெறும் பாேது படத்தில் முக்கியமாக நடித்துள்ள அனைவரும், குறிப்பாக நாயகன்-நாயகி கலந்து கொண்டால்தான் அப்படம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகும் என்பது தயாரிப்பாளர்களின் கூற்றாக உள்ளது. அப்படி இருக்கையில், மிருணாள் தாகூர் எந்த விழாக்களிலும் கலந்து கொள்ளாதது பட தயாரிப்பாளர்களுக்கு தொல்லையாக இருப்பதாக கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | லியோ to சித்தா-2023 டாப் ஹிட் படங்களை ‘இந்த’ ஓடிடி தளங்களில் பார்க்கலாம்!


கை நிறைய பட வாய்ப்புகளுடன் மிருணாள் தாகூர்..


நடிகை மிருணாள் தாகூர் மீது தயாரிப்பாளர்கள் மீது என்னதான் கோபம் இருந்தாலும், இவருக்கு பட வாய்ப்புகள் மட்டும் வந்து கொண்டே இருக்கின்றன. ஹை நன்னா திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் 21ஆம் தேதி வெளியாக உள்ளது. இதையடுத்து, அவர் ஃபேமிலி ஸ்டார் என்ற இன்னொரு தெலுங்கு படத்திலும் நடிக்கிறார். இந்தியிலும் ஒரு ரவுண்டு வந்து கொண்டிருக்கும் இவர், பூஜா மேரி ஜான் என்ற படத்திலும் நாயகியாக நடிக்கிறார். இதற்கான படப்பிடிப்பு வேலைகளும் நடந்து வருகிறது. 


நயன்தாராவும் இப்படித்தான்..


தமிழ் நடிகை நயன்தாரா, தான் நடிக்கும் படங்களுக்கான ப்ரமோஷன் விழாக்களில் கலந்து கொள்வதை எப்போதாே நிறுத்தி விட்டார். இதற்கான காரணத்தையும் அவர் வெளிப்படையாக எங்கும் கூறியதில்லை. ரஜினியுடன் நடிக்கும் படமாக இருந்தாலும் சரி, பாலிவுட் பாட்ஷா என்று அழைக்கப்படும் ஷாருக்கானின் படமாக இருந்தாலும் சரி, அப்படங்களின் இசை வெளியீட்டு விழாக்களில் கூட நயன் தலைக்காட்டுவதில்லை. ஆனால், தனது தயாரிப்பு நிறுவனத்தின் படங்களில் நடிக்கும் போது மட்டும் தனியாக ப்ரமோஷன் விழாக்களில் கணவருடன் கலந்து கொள்கிறார். இது பிற தயாரிப்பாளர்களுக்கு அவ்வப்போது கடுப்பை ஏற்படுத்தி வருகிறது. 


மேலும் படிக்க | தமிழே தெரியாமல் தமிழ் படம் இயக்கும் நடிகர் விஜய்யின் மகன்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ