Zee Tamil Anna Serial August 9th Episode Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. "அண்ணா" சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருக்கிறது. தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘அண்ணா’ சீரியல். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஷண்முகம் முத்துபாண்டியையே தனது வீட்டுக்கு காவலனாக மாற்றிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதாவது வீட்டில் ஷண்முகம் சந்தோஷமாக இருக்க தங்கைகளும் அப்பாவும் என்னடா பண்ணிட்டு வந்த பரணி என்னென்னமோ சொன்னா என்று பதற்றத்துடன் கேட்க ஷண்முகம் ஸ்டேஷனலில் நடந்த விஷயங்கள் அனைத்தையும் சொல்ல தங்கைகள் சந்தோசப்படுகின்றனர். 


இவர்கள் பேசி கொண்டு இருக்கும் போது முத்துபாண்டி ஜீப்பில் வந்து இறங்குவதை பார்த்த கனி பரபரப்புடன் வீட்டுக்கு ஓடி வந்து விஷயத்தை சொல்ல ஷண்முகம் பயப்படாதீங்கல அவன் இந்த வீட்டுக்கு பாதுகாப்பு கொடுக்க வந்திருக்கான் என்று சொல்கிறார். முத்துப்பாண்டி கான்ஸ்டபிளை ஹாரன் அடிக்க சொல்லியும் வீட்டில் இருந்து யாரும் வராமல் வேண்டுமென்றே முத்துபாண்டியை வெற்றுப்பேற்றுகின்றனர். 


மறுபக்கம் சனியன் இங்கு நடந்த விஷயங்கள் அனைத்தையும் சொல்ல சௌந்தரபாண்டி கோபப்பட பாக்கியம் என் மாப்பிளைக்குள்ளயும் இம்புட்டு திறமை இருக்கா என்று சொல்லி சந்தோசப்பட சௌந்தரபாண்டி கடுப்பாகிறார். இங்கே ஷண்முகம் கான்ஸ்டபிளிடம் உங்க பேர் என்ன என்றெல்லாம் விசாரித்து பிறகு எவனாவது கறியை தூக்கிட்டு வருவான் அவனை கழுத்து மேலயே அடித்து அனுப்புங்க என்று சொல்ல இவர்களும் அப்படியே பண்றோம் சார் என்று சொல்ல முத்துபாண்டிக்கு டென்ஷன் அதிகமாகி கொண்டேபோகிறது. மேலும் ரத்னா நக்கலமாக சிரிக்க இன்னும் உச்சகட்ட கோபம் அடைகிறான். 


பிறகு முத்துப்பாண்டி வீட்டிற்கு வர சௌந்தரபாண்டி அவனை திட்ட அவன் அங்க ரெண்டு பேரை நிறுத்திட்டு வந்திருக்கிறது பாதுகாப்புக்கு இல்ல, உளவு பார்க்க என்று தனது திட்டத்தை சொல்ல பரணி பாக்கியம் இதை கேட்டு ஷாக்காக்கின்றனர். உடனே சண்முகத்துக்கு போன் செய்து ரத்னாவை வெங்கடேஷுக்கு கல்யாணம் பண்ணி வை, அப்போ தான் இந்த பிரச்சனை முடிவுக்கு வரும் என்று பாக்கியம் சொல்ல சண்முகமும் சம்மதிக்கிறான். 


அடுத்து இசக்கியையும் ரத்னாவையும் கூப்பிட்டு இனிமே நீ தான் ரத்னா, நீ தான் இசக்கி இனி இப்படி தான் நடந்துக்கணும் என முத்துபாண்டிக்கு எதிராக இவன் ஒரு திட்டம் போடுகிறான். 


மறக்காமல் பாருங்கள்


பரபரப்புக்கு குறை ஏதுல் இல்லாமல் செல்லும் இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


அண்ணா சீரியலை எங்கு பார்ப்பது?


அண்ணா சீரியல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 


மேலும் படிக்க | 'ரொம்ப கஷ்டமா இருக்கு.. தப்பா போடாதீங்க’ கணவர் இறப்புக்கு நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா ரியாக்ஷன்​


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ