சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடன் நல்ல வரவேற்பை பெற்ற பேட்ட திரைப்படத்தில் நடித்த பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக், நடிகர் கமல் ஹாசனுடன் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிவசேனா கட்சி நிறுவனர் தாக்கரே-வின் வாழ்கை வரலாற்று படமான தாக்கரே திரைப்படத்தில் சிறப்பாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள நவாசுதீன் சித்திக், சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ரஜினி, கமலை ஒப்பிட வேண்டாம் என்றும், மீண்டும் கமலுடன் நடிக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.


சமீபத்தில் ரஜனி நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தில் வில்லனாக நடித்த நவாசுதீன் சித்திக், தாக்கரே படத்தில் பால் தாக்கரேவாக நடித்து அசத்தியுள்ளர். 


இந்நிலையில் தற்போது தாக்கரே படத்தின் வெற்றியை தொடர்ந்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்ததாவது., நேர்மையாக நடிக்கவேண்டும். உண்மையாக நடிக்கவேண்டும். யாரையும் காப்பி அடித்து நடிக்கக் கூடாது என உறுதியாக இருக்கின்றேன். தற்போது வெளியான தாக்கரே படத்திற்காக நிறையவே ஹோம் ஒர்க் செய்தேன். பால்தாக்கரே எப்படி நடப்பார், பார்ப்பார், எப்படிப் பேசுவார் என்பதை எல்லாம் உள்வாங்கி நடித்துள்ளேன் என தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் அவரது அனுபவங்கள் குறித்து கேட்டதற்கு. தன்னுடன் நடித்த நடிகர்களில் தமிழில் விஜய் சேதுபதியையும், ரஜினியையும் மிகவும் பிடித்த நடிகர்கள் எனவும், கமல்ஹாசன் உடன் நடிக்க விரும்புவதாகவும் தெரிவத்துள்ளார்.


தொடர்ந்து பேசிய அவர்... கமல் நடிப்பு, ரஜினி நடிப்பு என்று ஒப்பிடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. அதேசமயம் கமல் மிகச்சிறந்த நடிகர். கமலின் ஹேராம் படத்தில், ஒரு காட்சியில் நடித்தேன். ஆனால் அந்த காட்சி படத்தில் இடம்பெறவில்லை எனவும் வருத்தம் தெரிவித்துள்ளார்.