ஒரே கல்லூரியில் பயின்ற 50 மாணவர்கள் இணைந்து தயாரித்து வெளியாக காத்திருக்கும் நெடுநல்வாடை திரைபடத்தின் இசை வெளியிட்டு விழா நாளை நடைபெறவுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

"நெடுநல்வாடை" கிராமம், விவசாயம், மண், சார்ந்து பேசும் தமிழ் திரைப்படம். முதல்முறையாக ஒரே கல்லூரியில் படித்த 50 முன்னால் மாணவர்கள் இணைந்து இத்திரைபடத்தை தயாரித்துள்ளனர் என்ற பெருமையை பெற்றுள்ளது.


'பி ஸ்டார்' தயாரிப்பில் செல்வகண்ணன் இயக்குகிறார், 'பூ' திரைப்பட புகழ் ராமு முக்கிய கதாபத்திரத்தில் நடிகின்றார். இளங்கோ, அஞ்சலி நாயர், மைம் கோபி, ஐந்து கோவிலன் மற்றும் செந்தில்குமாரி ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.


 



 


இப்படத்தின் பாடல்கள் அனைத்தையும் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் எழுதியுள்ளார். ஜோஸ் பிராஃங்க்ளின் இசையமைக்கிறார்.


இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியிட்டு நாளை செப்டம்பர் 6-ம் தேதி நடைபெறவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.