புது டெல்லி: அதிக சூரிய ஒளி இருந்தால் Corona Virus அழுத்தம் குறையும் என நடிகை நேகா சர்மா தெரிவித்துள்ளார். இந்தியாவில் 81 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை மத்திய சுகாதார அமைச்சகம் வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது. இதில் 64 இந்திய குடிமக்கள் மற்றும் 17 வெளிநாட்டினர் அடங்குவார்கள். 17 வெளிநாட்டினர்களில் 16 பேர் இத்தாலியர்கள் மற்றும் 1 கனடா நாட்டை சேர்ந்தவர். கை மற்றும் சுவாசிப்பதில் சுகாதாரத்தை கடைபிடிக்கவும், அதிகமான கூட்டம் இருக்கும் பகுதிகளில் இருந்து விலகி இருத்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்துமாறு மக்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக பங்களாதேஷுடனான எல்லை தாண்டிய பயணிகள் பஸ் மற்றும் ரயில் சேவைகளை ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நிறுத்துவதாகவும், நான்கு அண்டை நாடுகளுடன் இணைக்கும் 18 சர்வதேச சோதனைச் சாவடிகளை மூடுவதாகவும் இந்தியா அரசு இன்று (வெள்ளிக்கிழமை) அறிவித்துள்ளது. 


இப்படி கொரோனா வைரஸ் பீதியில் மக்கள் உள்ள நிலையில், அதிக சூரிய ஒளி இருந்தால் Corona Virus அழுத்தம் குறையும் என நடிகை நேகா சர்மா தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு காணொளியை பகிர்ந்து கொரோனா வைரஸ் அழுத்தத்தை குறைக்க இதை செயுங்கள் எனக் கூறியுள்ளார்.