தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலின் கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில் சுடர் கண்ணுக்கு மட்டும் இந்து தெரிய சுடர் அவளை விருந்தாளி என்று நினைத்து வீட்டிற்குள் கூட்டி வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது சுடர் உள்ளே நுழைந்ததும் கனகவல்லி அவளை பார்த்து விட்டு வா மா சாப்பிடு என்று கூப்பிட சுடர் நான் அப்புறம் சாப்பிட்டுகிறேன், நீங்களே அழுது அழுது முகம் எல்லாம் வீங்கி போய் இருக்கீங்க, போய் ரெஸ்ட் எடுங்க என்று சொல்லி ரூமுக்கு அனுப்பி வைக்கிறாள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | தயாராகிறது வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2! ஹீரோ சிவகார்த்திகேயன் இல்லை-வேறு யார்?


பிறகு இந்து உடன் இருப்பது நினைவுக்கு வந்த ஐயோ உங்களை மறந்துட்டேனே, இருங்க அம்மாவை கூப்பிடுறேன் என்று சொல்ல இந்து அதெல்லாம் வேண்டாம் என்று சொல்கிறாள். இதனையடுத்து இந்து வீட்டில் தனது போட்டோவுக்கு பூஜை நடத்திருப்பதை பார்க்கிறாள், சுடர் இந்த போட்டோவை பார்த்தா நான் பேய்-னு தெரிந்திடுமே என்று பயப்பட அந்த நேரத்தில் அங்கு வந்த மனோகரி அந்த போட்டோவை பார்த்ததும் அதான் பூஜை முடிஞ்சிடுச்சுல இந்த போட்டோவை எடுத்திட்டு போக என்று சொல்ல செல்வி அதை மேலே ரூமுக்கு கொண்டு சென்று விடுகிறாள்.



அடுத்து சுடர் இந்துவிடம் நீங்க ஜூஸ் குடிச்சிட்டு தான் போகணும் என்று சொல்லி ஜூஸ் கொண்டு வந்து கொடுக்க நான் மேங்கோ ஜூசை குடிக்க மாட்டேன் என்று சொல்லி வெளியே வந்து விடுகிறாள், பக்கத்துக்கு வீட்டிற்குள் நுழைய அங்கு தீபா என்ற பெண் ஷோபாவில் உட்கார்ந்து பேஸ் மாஸ்க் போட்டு கொண்டிருக்க இதை பார்த்த இந்து பயந்து கத்துகிறாள். இந்து கத்திய சத்தத்தை கேட்டு கண் திறந்து பார்க்கும் தீபா யாரும் இல்லாததால் பிரம்மை என நினைத்து கொள்கிறாள். அடுத்து தீபாவுக்கு ஒரு போன் கால் வர உடனே மேக்கப்பை கலைத்து நைட்டிக்கு மாறும் தீபா வீடியோகாலில் பேச அவள் அந்த வீட்டு வேலைக்காரி என்பது தெரிய வருகிறது. வாடகைக்கு வீடு கேட்பவர்களிடம் எல்லாம் பேய் இருப்பதாக சொல்லி தட்டி கழித்து இவளே இந்த வீட்டில் தங்கி இருப்பதும் தெரிய வருகிறது. 


இதனால் இந்து தீபாவுக்கு பயம் காட்டி நான் இந்த வீட்டில் தான் இருப்பேன், நீ எதாவது செய்யணும்னு நினைச்ச நீ பண்ற வேலையை உன் ஓனரிடம் போட்டு கொடுத்துடுவேன் என்று மிரட்ட தீபா பயந்து இந்துவின் டீலுக்கு சம்மதம் சொல்கிறாள். மறுநாள் எழில் சுடர் சமைத்த சாப்பாட்டை சாப்பிடாமல் கோபத்துடன் எழுந்து செல்ல இதை பார்த்து இந்து கவலைப்படுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


மேலும் படிக்க | GOAT படத்தில் விஜய்க்கு டபுள் மடங்கு சம்பளம்.. அப்போ மற்ற நடிகர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ