ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கும் புதிய படத்திற்கு ‘நோட்டா’ என பெயரிடப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் ஒரே சமயத்தில் தயாராகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த படத்தில் நாயகனாக விஜய் தேவரகொண்டா, நாயகியாக மெஹ்ரீன் மற்றும் சத்யராஜ், நாசர் என பலர் நடிகின்றனர். படத்தை ஆனந்த் சங்கர் இயக்குகிறார். சாந்தா ரவி.கே. சந்திரன் ஒளிப்பதிவாளராகவும், சாம் சி.எஸ், இசையமைப்பாளராகவும் பணிபுரிகின்றனர்.


அரசியலை மையமாக கொண்டு உருவாகி வரும் ‘நோட்டா’ படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டது. இந்த ட்ரைலர், படத்தின்' நாயகன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். நோட்டா என்றாலே தமிழகத்தில் எப்பொழுதும் ஒரே பரபரபப்பு தான். அந்த வகையில் இந்த படத்தின் ட்ரைலர் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.