அக்டோபர் 6-ம் தேதி சமந்தா மற்றும் நாகசைதன்யாவுக்கு கோவாவில் திருமணம் நடைபெறுகிறது. இந்நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்த சமந்தா தனது காதல் பற்றி மனம் திறந்து கூறியுள்ளார். அதில்,


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நான், நாகசைதன்யாவை முதன் முதலில் ஏமாயசேசவே என்ற படத்தில் சந்தித்தேன். அப்போதே அவர் மீது எனக்குள் காதல் ஏற்ப்பட்டது. தொடர்ந்து இருவரும் ஒருவருக்கொருவர் அன்பாகவே பழகிவந்தோம். மனதளவில் எனக்கு அவருடன் எப்போதோ திருமணம் ஆகிவிட்டது.


இப்போது என் வாழ்வில் அவரைவிட எனக்கு எதுவும் பெரிதில்லை. 30 வயதில் திருமணம் என்று முன்பே நினைத்திருந்தேன். அது இப்போது நடக்கிறது. 


திருமணமாகி நான் போக இருக்கும் குடும்பத்தினர், நான் நானாக இருக்கலாம் என்று அனுமதி அளித்து இருக்கிறார்கள். அது மிகவும் அழகானது.


இவ்வாறு தெரிவித்தார்.