பாலிவுட் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர், கங்கனா ரனாவத். இவர், தமிழில் தாம் தூம் படம் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு, முன்னாள் முதலமைச்சரும் நடிகையுமான ஜெ.ஜெயலலிதாவின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட ‘தலைவி’ படத்தில் நடித்திருந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சர்ச்சைக்கு பெயர் போனவர்..


கங்கனா ரனாவத், பாலிவுட் திரையுலகை சேர்ந்த சர்ச்சைக்குரிய நடிகைகளுள் ஒருவர். நெப்போட்டிஸம் குறித்து எழுந்த பிரச்சனைகள், ஒரு பிரபல நடிகரின் தற்கொலை குறித்து எழுந்த பிரச்சனை என பல விஷயங்கள் குறித்த கருத்துக்களை கூறி அடிக்கடி ட்ரெண்ட் ஆவது இவரது வழக்கம். சமீபத்தில் இந்தியா முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பிய ‘தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு ஆதரவாக பேசி பலரிடம் வசைப்பாட்டு வாங்கினார். இவர் ஒரு நேர்காணலில் பாகிஸ்தான் ராணுவம் குறித்து கேலிக்குறிய வகையில் சில கருத்துகளை பேசினார். இது அந்த நாட்டில் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. 


பாகிஸ்தான் நடிகை ஆவேசம்!


கங்கனா ரனாவத் பாகிஸ்தான் ராணுவம் குறித்து பேசியதற்கு அந்நாட்டு நடிகை ஒருவர் பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து ஒரு நேர்காணலில் பேசியுள்ள அவர், “நான் ஒரு முறையாவது கங்கனாவை சந்திக்க விரும்புகிறேன். அவ்வாறு நான் அவரை சந்திக்கும் போது அவரை இரண்டு முறையாவது கன்னத்தில் அறைவேன்” என்று கூறினார். மேலும் கங்கனாவிற்கு தங்கள் நாட்டை பற்றியோ அல்லது தங்களின் ராணுவம் பற்றியோ பேச எந்த உரிமையும் இல்லை என்றும் மற்ற நாட்டை பற்றி எதற்காக பேச வேண்டும் என்றும் ஆவேசமாக பேசினார். தொடர்ந்து பேசிய அவர், “உங்கள் நாட்டின் மீது கவனம் செலுத்துங்கள். உங்கள் திரைப்படங்களை மட்டும் பாருங்கள். உங்கள் மீதான சர்ச்சைகளை முதலில் கவனியுங்கள்” என்று கூறியுள்ளார.


மேலும் படிக்க | பாலிவுட்டிலும் ஜெயித்தாரா அட்லீ..? ஜவான் படம் எப்படி..? முழு விமர்சனம் இதோ!


பதில் அளிக்காத கங்கனா..


சமூக வலைதளங்களில் அதிகம் ஆக்டிவாக இருக்கும் பிரபலங்களுள் ஒருவர் கங்னா ரனாவத். இவர், வைரலாக பேசப்படும் எந்த பிரச்சனையாக இருந்தாலும் உடனே தனது சமூக வலைதள பக்கங்களில் அது குறித்து பேசிவிடுவார். ஆனால், பாகிஸ்தான் நடிகை “கன்னத்தில் அறைவேன்” என்று பேசியுள்ளதற்கு இன்றளவும் அவர் பதில் ஏதும் தெரிவிக்காமல் இருக்கிறார். 


அரசியலில் இறங்குவாரா..? 


கங்கனா ரனாவத், அவ்வப்போது நாட்டு பிரச்சனையாக எழும் எந்த பிரச்சனையாக இருந்தாலும் அது குறித்து இவர் வெளிப்படையாக பேசுவதால் இவர் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்போது வரை நடிகையாக மட்டுமே இருக்கும் அவர், சில காலம் போனால் அரசியலில் ஈடுபடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 


சந்திரமுகியாக கங்கனா..


பி.வாசு இயக்கத்தில் உருவாகியுள்ள சந்திரமுகி 2 படத்தில் கங்கனா ரனாவத் சந்திரமுகியாக நடித்துள்ளார். ராகவா லாரன்ஸ் இதில் வேட்டையன் ராஜாவாக நடித்துள்ளார். படம், வரும் 15ஆம் தேதி வெளியாகிறது. சந்திரமுகி அந்த வேட்டைய புரம் அரண்மனைக்கு வந்தது எப்படி? அவரை வேட்டையன் ராஜா கவர்ந்து வந்தது எப்படி? போன்ற முன்கதையை இந்த படம் விவரிக்க உள்ளது. 


சில நாட்களுக்கு முன்னர் சந்திரமுகி 2 படத்தின் இசை வெளியீட்டு விழா நடைப்பெற்றது. இதில் பேசிய ராகவா லாரன்ஸ், “ஜோதிகா சந்திரமுகி படத்தில் சந்திரமுகி மாதிரிதான் நடித்தார். ஆனால் கங்கனா ரனாவத்தான் சந்திரமுகியாகவே நடித்திருக்கிறார்” என்றார். இதனால் இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 


மேலும் படிக்க | ‘ஜவான்’ படத்திற்காக அட்லீ வாங்கிய சம்பளம் இவ்வளவா..? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ