தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் இரண்டு முக்கிய மெகா தொடர்கள் விரைவில் முடிவுக்கு வருகின்றன. அவை என்னென்ன தெடர்கள் தெரியுமா..? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாண்டியன் ஸ்டோர்ஸ்:


2018ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் தொடர், பாண்டியன் ஸ்டோர்ஸ். குன்றக்குடி‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ எனும் மளிகைக்கடையை நடத்தி வரும் அண்ணன் தம்பிகளுக்கும், அவர்களது குடும்பத்தில் நிகழும் சம்பவங்களுமே இந்த தொடரில் கதையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 
சத்தியமூர்த்தி, ஜீவானந்தம், கதிரவன் மற்றும் ஜெயகண்ணன் எனும் நான்கு சகோதரர்களும் தங்களது குடும்பத்தினருடன் ஒரே வீட்டில் வாழ்கின்றனர். அனைத்து கூட்டுக்குடும்பத்திலும் எழும் பிரச்சனைகளும் சவால்களும் இவர்களது குடும்பத்திலும் எழுகின்றன, குடும்பத்திற்குள் கிளம்பும் பிரச்சனைகளை இவர்கள் எதிரெதிரே நின்று சமாளித்தாலும், குடும்பத்திற்கு யாரேனும் தீங்கு செய்ய நினைத்தால் அவர்களை கூட்டாக சேர்ந்து துவம்சம் செய்கின்றனர். இதனாலேயே இந்த சீரியல் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மெகா ஹிட் ஆனது. 


கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் தற்போது முடிவுக்கு வர உள்ளது. ஆனால், இந்த தொடரின் இரண்டாவது சீசனும் தொடங்க உள்ளதாகவும், அதன் ப்ரமோ காட்சிகள் படமாக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் 2வது சீசனை ரசிகர்கள் எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர்.  


தற்போது, கதையின் முக்கிய கதாப்பாத்திரங்களான சத்ய மூர்த்தி மற்றும் தனம் ஆகியோரை சுற்றி கதை சுழல்கிறது. இந்த தொடரின் க்ளைமேக்ஸை சீரியல் குழு ஸ்பெஷலாக படம் பிடித்துள்ளனர். படப்பிடிப்பின் இறுதி நாளில் அனைவரும் கேக் கட்டிங் செய்து பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு பிரியா விடை கொடுத்துள்ளனர். 


மேலும் படிக்க | பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிகம் சம்பளம் வாங்கும் ‘அந்த’ பாேட்டியாளர் யார்?


இன்னொரு தொடர் என்ன? 


மதிய நேரத்தில் ஒளிபரப்பாகி வந்த தொடர், தென்றல் வந்து எண்ணை தொடும். இந்த தொடர் இரண்டு பாகங்களாக வெளியாகி ரசிகர்களின் வரவேற்பினை பெற்றது. வெளிநாட்டில் படித்தாலும் தமிழ் கலாச்சாரத்தை விட்டுக்கொடுக்காத அபிநயாவிற்கும், இதையெல்லாம் மதிக்காத ஹீரோ வெற்றிக்கும் இடையே நடக்கும் மோதலும் காதலும்தான் ‘தென்றல் வந்து எண்ணைத்தொடும்’ தொடரின் முதல் பாகத்தின் கதையாக இருந்தது. இந்த பாகம், வெற்றி சிறைக்கு செல்வதோடு முடிவுற்றது. 


‘தென்றல் வந்து எண்னைத்தொடும்’ தொடரின் இரண்டாம் பாகத்தில் வெற்றி 6 வருடங்கள் கழித்து சிறையில் இருந்து விடுபடுவது போன்ற கதையுடன் ஆரம்பித்தது. சிறையில் இருந்து வெளியில் வந்து தனது மனைவியை தேடும் வெற்றி, தன் குழந்தையை அபி கலைத்து விட்டு வேறு மாநிலத்திற்கு சென்று விட்டாள் என அறிந்து கொள்கிறான். இதையடுத்து காஞ்சிபுரத்தில் பெரிய ரௌடியாக உருவாகிரான். அபி, ஒரு வெளி மாநிலத்தில் மாவட்ட ஆட்சியராக பணியில் இருக்கிறாள். கலைத்து விட்டதாக பிறரிடம் பொய் கூறிவிட்டு, அவள் அந்த குழந்தையை உண்மையில் வளர்த்து வருகிறாள். மீண்டும் அபியும் வெற்றியும் இணைந்தார்களா? இதுவே இந்த சீரியலின் முடிவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்ட இந்த சீரியல், இனி வேறு பாகமாக தொடர வாய்ப்பில்லை. 


டி.ஆர்.பியை எகிற வைக்கும் புது தொடர்கள்..! 


தற்போது புதிதாக ஆரம்பிக்கப்பட்டிருக்கும் சில தொடர்கள், சேனலின் டி.ஆர்.பியினை எகிற வைத்து வருகிறது. அதில் சிறகடிக்க ஆசை தொடரும், ஆஹா கல்யாணம் தொடரும் அடங்கும். வித்தியாசமான கதை பின்னணியில் இருக்கும் இந்த இரண்டு தொடர்களையும் இல்லத்தரசிகள் மட்டுமன்றி, இளைஞர்கள் பலரும் பார்த்து ரசித்து வருகின்றனர். ஒரு காலத்தில் மக்களால் பெரிதும் ரசிக்கப்பட்ட-கொண்டாடப்பட்ட பாக்கியலக்ஷமி தொடர், தற்போது ரசிகர்களை பெரிதாக ஈர்க்கவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது. 


மேலும் படிக்க | தமிழ்நாட்டின் டாப் 5 டிவி தொடர்கள்! எதிர்நீச்சல் சீரியலுக்கு எந்த இடம்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ