மணிரத்னம் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் பொன்னியின் செல்வன் உருவாகியுள்ளது. இரண்டு பாகங்களாக வெளியாகவிருக்கும் இப்படத்தில் விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஐஸ்வர்யா ராய்,த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். படம் வெளியாக இன்னும் 2 மாதங்கள் இருக்கும் நிலையில், அடுத்தடுத்த அப்டேட்டுகளையும், புரோமோஷன் பணிகளையும் பொன்னியின் செல்வன் குழு தொடங்கியுள்ளது. அண்மையில் வெளியான டீசரை பார்த்த ரசிகர்கள் நிச்சயம் படம் மாபெரும் வெற்றி பெறும் என கூறிவருகின்றனர். அதேசமயம், படத்தின் கதாபாத்திர பெயர்கள் மீதும், லுக்குகள் மீதும் சிலர் அதிருப்தியையும் தெரிவித்துவருகின்றனர். இருந்தாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பலருக்கும் அதிகரித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தச் சூழலில், படத்தில் இடம்பெற்றிருக்கும் பொன்னி நதி பாடல் நேற்று வெளியாகுமென்று படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, பொன்னி நதி பாடல் வெளியீட்டு நிகழ்வு தனியார் மால் ஒன்றில் நடந்தது. இதில், கார்த்தி, ஜெயம் ரவி, ஜெயராம் கலந்துகொண்டனர். பாடலானது அந்த மாலில் வைக்கப்பட்டிருந்த ஸ்க்ரீனில் ரசிகர்கள் முன்னிலையில் ஒளிபரப்பப்பட்டது.


 



பொன்னி நதி பார்க்கணுமே என்று தொடங்கும் அந்தப் பாடலில் சோழ தேசத்தின் பெருமையையும், பொன்னி நதி பெருமையையும் வந்தியத்தேவன் பாடும்படி வரிகள் அமைக்கப்பட்டிருந்தன. ஏ.ஆர். ரஹ்மான் பாடியிருக்கும் இப்பாடலை இளங்கோ கிருஷ்ணன் எழுதியிருக்கிறார். பாடலானது தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்டது.


மேலும் படிக்க | 'பொன்னி நதி' பாடலால் கிளம்பிய புதிய சர்ச்சை! - நெட்டிசன்ஸ் குமுறல்!


தமிழைப் பொறுத்தவரை பாடலின் வரிகள் கொண்டாடப்பட்டாலும், ஏ.ஆர். ரஹ்மானின் குரல் பாடலுக்கு ஒத்துவரவில்லை என ரசிகர்களில் ஒருதரப்பினர் வெளிப்படையாகவே கூறிவருகின்றனர். இருப்பினும் பாடல் ஒன்றும் அவ்வளவு மோசமில்லை. வழக்கமான ரஹ்மான் பாடல்கள் போல் கேட்க கேட்க பிடித்துப்போகும் எனவும் சிலர் கூறுகின்றனர்.


 



இந்நிலையில் நேற்று மாலை வெளியான பொன்னி நதி பாடலை இதுவரை யூட்யூபில் 5 மில்லியன் பேர் பார்த்திருக்கின்றனர். பாடல் வெளியான ஒரே நாளில் இத்தனை பேர் பார்த்திருப்பது, பொன்னியின் செல்வன் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிரூபிக்கும்விதமாகவே இருப்பதாக பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க | சிக்கலில் அருண் விஜய்யின் ‘யானை’ படம்: உயர் நீதிமன்றம் கூறியது என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ