மணிரத்னம் இயக்கத்தில் அதிக எதிர்பார்ப்புக்கு மத்தியில் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ம் தேதியன்று வெளியானது.  இப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.  இப்படத்தில் நடித்திருந்த ஒவ்வொரு நடிகர், நடிகைகளும் அந்தந்த கதாபாத்திரத்திற்கு பொருந்தியிருந்தனர்.  படத்தின் ஒளிப்பதிவும், நடிகர்களின் தேர்ந்த நடிப்பும் ரசிகர்களிடையே பாராட்டை பெற்றது.  படத்தின் முதல் பாகத்திற்கு எந்தளவிற்கு வரவேற்பு இருந்ததோ அதைவிட குறைவாக தான் இரண்டாம் பாகத்திற்கு வரவேற்பு கிடைத்துள்ளது.  பொன்னியின் செல்வன்-2 கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது, நாவலிலுள்ள கதையையே மணிரத்னம் மாற்றிவிட்டார் என்பது போன்ற விமர்சனங்களும் எழுந்துள்ளது.  பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்திற்கு மக்கள் மத்தியில் கிடைத்த வெற்றியே, படத்தின் இரண்டாம் பாகத்திற்கு சிறந்த விளம்பரமாக அமைந்தது.    சோழர்களின் உண்மையான வரலாறு இதுதான் என்று மனதில் பதிய வைக்காமல் வெறும் படமாக மட்டும் பார்ப்பவர்களுக்கு இப்படம் ரசிக்கும்படியாக இருக்கும்.  சுருக்கமாக சொல்லப்போனால், நாவலை படித்தவர்களுக்கு இந்த படம் அதிருப்தியையும், நாவலை படிக்காதவர்களுக்கு இப்படம் நல்லதாகவும் அமைந்துள்ளது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | உயிர் உங்களுடையது தேவி... குந்தவை எனும் ஐயன் லேடி - மறக்க கூடாத சோழர் குல இளவரசி!


பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தில் ஆதித்த கரிகாலனுக்கும், நந்தினிக்கு இடையே நடக்கும் காட்சிகள் பெரும்பலான ரசிகர்களை உணர்வுபூர்வமாக கட்டிபோட்டுள்ளது.  கரிகாலன் தனது பழைய காதலி நந்தினியை  சந்திக்கும் அந்த நிமிடங்கள் பலருக்கும் சிறந்த கூஸ்பம்பஸாக இருந்திருக்கக்கூடும் சிறிதும் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை.  ஆதித்த கரிகாலன் மீது நந்தினிக்கு எவ்வளவு தான் பழியுணர்ச்சி மிகுந்து இருந்தாலும், கரிகாலனை சந்தித்ததும் அவனை கொல்ல மனமின்றி நந்தினி மனமுடைந்து அழுகும் இடங்கள் எல்லாம் பலரின் மனதையும் வருடியது.  அதேபோல வந்தியத்தேவனுக்கும், குந்தவைக்கும் இடையேயான காதல் காட்சிகளை பற்றி சொல்லவே வார்த்தையில்லை.  மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்திருக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா துலிபலா, அஷ்வின், ரஹ்மான், பார்த்திபன், சரத்குமார், ஜெயராம் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.  சோழர்களின் வரலாற்றை பற்றி புனைந்து கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட பொன்னியின் செல்வன் படத்தை இயக்குனர் மணிரத்னம் ஆரம்பத்தில் ஒரே படமாக வெளியிட திட்டமிட்டு, அதன்பின்னர் இரண்டு பாகங்களாக வெளியிட்டார்.  பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் தமிழகத்தில் ரூ.230 கோடிக்கும் மேல் வசூல் செய்தது மற்றும் படம் உலகளவில் ரூ.500 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை புரிந்தது.  பொன்னியின் செல்வன்-2 படம் வெளியான இரண்டே நாட்களில் உலகளவில் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


'பொன்னியின் செல்வன்-2' படம் திரையரங்குகளில் வெளியாகி இரண்டு நாள் ஆகிவிட்டது, படத்தை திரையரங்குகளில் பார்த்து ரசித்த பலரும் படத்தின் ஓடிடி வெளியீடு எப்போது என்றும், படம் எந்த தளத்தில் வெளியாகும் என்றும் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.  இந்த சமயத்தில் படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த தகவல் வெளியாகியுள்ளது, பொன்னியின் செல்வன்-1 படத்தை வெளியிட்ட அதே ஓடிடி நிறுவனம் தான் படத்தின் இரண்டாம் பாகத்தையும் வெளியிட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.  அதாவது பொன்னியின் செல்வன்-2 படத்தின் ஓடிடி வெளியீட்டு உரிமையை அமேசான் ப்ரைம் வீடியோ இயங்குதளம் கைப்பற்றி இருப்பதாக கூறப்பட்டுள்ளது மற்றும் படம் இந்த தளத்தில் ஜூன் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | பிரேக் எடுக்க போகிறேன்..சிவகார்த்திகேயன் ட்வீட், ரசிகர்கள் அதிர்ச்சி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ