தெலுங்கு திரையுலகின் பிரபலமான நடிகர்களுள் ஒருவர் மகேஷ் பாபு. இவர், இயக்குநர் த்ரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் டைரக்டு செய்யும் ‘குண்டூர் காரம்’ என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் நடிகை பூஜா ஹெக்டே நடிக்க இருந்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குண்டூர் காரம்: 


அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி, தென்னிந்தியா முழுவதும் மிகப்பெரிய வெற்றி பெற்ற படம், அலவைகுந்தபுரமுலு. இந்த படம், தமிழிலும் வைகுண்டபுரம் என்ற பெயரில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்த படத்தின் இயக்குநர் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் தற்போது மகேஷ் பாபுவை வைத்து குண்டூர் காரம் என்ற படத்தை இயக்கி வருகிறார், சுமார் 100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தில் ஜெயராம், சுனின், ரம்யா கிருஷ்ணன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீலீலா, ஜெகபதி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இதில் நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்க இருந்தார். 


மேலும் படிக்க | வாயமூடிட்டு எப்படி கிஸ் பண்ணீங்க? வெட்கப்பட்ட எஸ்.ஜே.சூர்யா!


படத்தில் இருந்து நீக்கம்? 


குண்டூர் காரம் படம் குறித்த தகவல்கள் கடந்த சில நாட்களாகவே சினிமா உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றனர். இதற்கு படத்தின் ஹீரோவான மகேஷ் பாபுவும் இயக்குநர் த்ரிவிக்ரமும் ஒரு காரணம் என கூறப்படுகிறது. இதில், நாயகியாக நடிக்க இருந்த பூஜா ஹெக்டே அந்த படத்தில் இருந்து திடீரென நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பூஜா இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கும் போதே வேறு சில படங்களுக்கும் கால்ஷீட் கொடுத்திருப்பதாகவும் இதுவே இவரை படத்தில் இருந்து நீக்க காரணம் என்றும் சிலர் கூறுகின்றனர். ஆனால் ஒரு சில ரசிகர்களோ, “அதெல்லாம் இருக்காது...பூஜா ஓவர் ஆக்டிங் செய்வதனாலேயே இந்த படத்தில் இருந்து விலக்கிவிடப்பட்டிருபார்..” என வாய்கூசாமல் வாய்க்கு வந்த தகவலை பரப்பி வருகின்றனர். 


விலக்கிவிடப்பட்ட தமன்? 


வாரிசு படத்திற்கு இசையமைத்திருந்த பிரபல இசையமைப்பாளர் தமன், மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் படத்திற்கும் இசையமைக்க இருந்தார். ஆனால், என்ன காரணத்தினாலோ, இந்த படத்தில் இருந்து இவர் நீக்கப்பட்டதாகவும் ‘ராக்-ஸ்டார்’ அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. தமனும் இதுகுறித்து காட்டமாக சில ட்விட்டர் பதிவுகளை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 


எல்லாவற்றிலும் மாற்றம்....


குண்டூர் காரம் படத்தில் இன்னும் ஹீரோவையும் இயக்குநரையும் மாற்றாதது ஒன்றுதான் பாக்கி. மற்றபடி, கதையை மாற்றுவது, மாற்றிய கதையை மீண்டும் எழுதுவது, ஹீரோயினை மாற்றுவது, இசையமைப்பாளரை மாற்றுவது என மாற்றங்களுக்கு மேல் மாற்றங்கள் செய்யப்பட்டு கொண்டிருக்கிறது. குண்டூர் காரம் படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை மாதம் முதல் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 


மீண்டும அல்லு அர்ஜுனுடன் ஒரு படம்..


குண்டூர் காரம் படத்தின் இயக்குநர் த்ரிவிக்ரம் ஸ்ரீநினிவாஸ், அடுத்து இன்னொரு படத்தில் அல்லு அர்ஜுனுடன் கைக்கோர்க்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புஷ்பா 2 படத்தில் நடித்து வரும் அல்லு அர்ஜூன் தற்போது படு பிசியாக உள்ளதால் இது குறித்து அவரிடம் பேச ஸ்ரீநிவாஸிற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | சினிமாவிற்கு 'குட்-பை’ சொல்லும் லோகேஷ்? இயக்குநரின் ‘இந்த’ முடிவால் ரசிகர்கள் சோகம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ