பூனம் பாண்டே ஒரு நேர்காணலில் "நாங்கள் மீண்டும் ஒன்றாக இருக்கிறோம்" என தெரிவித்துள்ளார்..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகைகளின் திருமணங்கள் நீண்ட காலமாகவே விமர்சிக்கப்பட்டு வருகின்றன. ஹாலிவுட் நட்சத்திரங்களுக்கு, விவாகமும்,விவாக ரத்தும் ஒரு விஷயமே அல்ல என்ற கலாச்சாரம் பரவி வருகிறது. வீடியோ, புகைப்படங்கள் வெளியிட்டு சர்ச்சைகளை ஏற்படுத்தியே பிரபலமானவர் பாலிவுட் நடிகை பூனம் பாண்டே (Poonam Pandey). இவர், சாம் பம்பாயை திருமணம் (செப்டம்பர் 9 அன்று) செய்து கொண்டனர். திருமண புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கும் பூனம் பாண்டே, ஏழு ஜென்மம் உன்னுடன் வாழ வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். 


இந்நிலையில், திருமணம் ஆனா 10 நாட்களிலேயே இருவருக்கும் இடையிலான வாக்குவாதம், ஒரு பெரிய சண்டையாக மாறியுள்ளது. இதையடுத்து தனது காதல் கணவர் மீது அவர் பாலியல் புகார் அளித்திருப்பது பலரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து நடிகை பூனம் பாண்டே கூறிய புகாரில், தனது கணவர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாகவும், கொடுமை படுத்துவதாகவும், இதை எதிர்த்தால் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டுவதாகவும் கூறியுள்ளார். எனவே அவரது கணவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.


இது குறித்து பூனம் பாண்டே கூறியதாவது., “எனக்கும் சாமுக்கும் இடையே தர்க்கம் ஏற்பட்டது, அது முற்றிய நிலையில் அவர் என்னை தாக்க தொடங்கினார். அவர் என்னை கழுத்தை நெறித்தார், நான் இறக்க போகிறேன் என்றே நினைத்தேன். அவர் என் முகத்தில் குத்தி, என் தலைமுடியை பிடித்து இழுத்து கட்டிலின் முனையில் என் தலையை மோதினார். எப்படியோ அவரது பிடியிலிருந்து விலகி அந்த அறையை வெளியே ஓடி வந்தேன். ஓட்டல் ஊழியர்கள் போலீஸுக்கு போன் செய்ததால் அவர்கள் வந்து சாமை கைது செய்தனர். என்னிடமிருந்தும் புகார் பெற்றுக் கொண்டனர்.


ALSO READ | காதலனுடன் நிர்வாணமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை..!


நாங்கள் காதலிக்கும் காலத்திலேயே அவரால் நான் பலமுறை மருத்துவமனைகளில் இருந்துள்ளேன். இந்த மோசமான உறவை நான் பொறுத்துக் கொண்டதற்கான காரணம் நாங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்கிறோம் என்று நான் நம்பியது தான். எங்களை எப்போதும் ஒரு சிறந்த ஜோடியாக நான் உருவகித்துக் கொண்டேன். அவரது அதீத காதலாலாலும், பாதுகாப்பின்மையாலும் கோபம் வெளிப்படும். இவை அனைத்தும் சரியாகும் என்ற நம்பிக்கையிலேயே நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். துரதிர்ஷ்டவசமாக, இது நல்ல முடிவாக இருக்கவில்லை. காதலுக்கு கண்ணில்லை என்பதற்கு நானே சிறந்த உதாரணம்” என்று கூறியுள்ளார். 



இந்நிலையில், கணவர் சாம் தனது இண்ஸ்டாகிராம் பக்கத்தில் இருவரும் இருக்கும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இது குறித்து பூனம் பாண்டே ஒரு நேர்காணலில் "நாங்கள் மீண்டும் ஒன்றாக இருக்கிறோம்" என தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "உங்களுக்கு என்ன தெரியும்? நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் அதிகமாக நேசிக்கிறோம். நாங்கள் வெறித்தனமாக காதலிக்கிறோம். மேலும், எந்த ஷாதிக்கு அதன் ஏற்ற தாழ்வுகள் இல்லை?". 


குடும்பங்கள் மத்தியஸ்தம் செய்ததா, என்ற கேள்விக்கு. பூனம் கூறினார், "நிச்சயமாக, குடும்பங்கள் முக்கியம், ஆனால் நாங்கள் அதை எங்கள் சொந்தக்காரர்களுடன் சமாளித்தோம்". புதுமணத் தம்பதிகள் விரைவில் மும்பைக்கு வருவார்கள் என்று சாம் கூறுகிறார். "நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்" என்று பூனம் மகிழ்ந்தார்.