புதுடெல்லி: நடிகையும் மாடலுமான பூனம் பாண்டே (Poonam Pandey) சமீபத்தில் தனது கணவர் சாம் பாம்பேயை (Sam Bombay) பிரிந்து தற்போது தனிமையில் இருக்கிறார். இருவரது திருமணம் வாழ்க்கையில் சில காலமாக ஏற்பட்ட பிரச்னையை அடுத்து, பூனம் தனது கணவர் சாமை விட்டு பிரிந்தார். தற்போது தனது வாழ்க்கையின் அடுத்த கட்டத்தைப் பற்றி பேசியுள்ளார். அடுத்த சில ஆண்டுகளுக்கு யாருடனும் டேட்டிங் செய்ய விரும்பவில்லை என்று பூனம் பாண்டே தெரிவித்துள்ளார். இருப்பினும் தனக்கு எப்படிப்பட்ட மாப்பிள்ளை வேண்டும் என்றும் கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தனிமையில் இருக்கும் பூனம் பாண்டே:


TeleTalk க்கு அளித்த பேட்டியின் போது பூனம் பாண்டே (Poonam Pandey) கூறுகையில், நான் கடந்து வந்த கட்டத்திலிருந்து மெதுவாக வெளியே வருகிறேன். நான் முன்பு போல் கவர்ச்சியாக இருக்க முயற்சிக்கிறேன் என்றார். பூனத்திடம் கேட்டபோது, ​​நீங்கள் இப்போது தனிமையில் இருக்கிறீர்களா? இதற்குப் பதிலளித்த பூனம், "நான் இப்போதும் உறவில் இருக்கிறேன், அதுவும் என்னுடன் மட்டுமே" என்று கூறிய அவர், நான் எனக்காக இருப்பது மிகவும் நம்பிக்கையாக இருக்கிறது. இந்த வாழ்க்கை மிகவும் கவர்ச்சியானது. நான் தனியாக இருப்பது நல்லது. அடுத்த 5 வருடங்கள் நான் தனிமையில் இருப்பேன் என்றார்.


விக்கி கௌஷலைப் போன்ற கணவர் வேண்டும்:


அந்தப் பேட்டியின் போது பூனம் பாண்டேவிடம் நீங்கள் திருமணம் செய்து கொண்டீர்களா என்று கேட்கப்பட்டது. எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருந்தது, ஆனால் திடீரென்று அது முடிந்தது என்றார். பிறகு என்ன நடந்தது? எனக் கேட்டதற்கு, இந்த கேள்விக்கு அவர் நேரடியான பதில் அளிக்கவில்லை. ஆனால் நிச்சயமாக அவர் மருத்துவரின் ஆலோசனை பெற்று வருவதாகவும், மெதுவாக கஷ்டங்களில் இருந்து குணமடைந்து வருவதாகவும் சொன்னார். 


ALSO READ | "ஆபாச" வீடியோ சர்ச்சை குற்றச்சாட்டில் பூனம் பாண்டேவை கைது


இந்த பேட்டியின் நடுவே, எனக்கு ரோல்மாடல் கத்ரீனா கைப் தான் என்றார். மக்கள் கத்ரீனாவை மிகவும் நேசிக்கிறார்கள். சினிமாத்துறையில் சிறப்பாக பணியாற்றியவர். கத்ரீனா ஒரு நல்ல நபரை திருமணம் செய்துள்ளார். விக்கி கௌஷலைப் போன்ற ஒரு ஆண் எனக்குக் கிடைத்தால், எனக்கும் திருமணம் செய்துகொள்ள ஆசை என்றார். 


 



பூனத்தின் முகத்தில் பலத்த காயங்கள்:


சில காலத்திற்கு முன்பு பூனம் பாண்டேவின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட சில பிரச்சனைகள் தலைப்புச் செய்திகளில் இடம் பெற்றன. அவர் காதலன் சாம் பாம்பேயை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு தனது கணவர் தன்னை கொடுமைப்படுத்துவதாக குற்றம் சாட்டினார். இந்த வழக்கில் சாம் பாம்பேயும் கைது செய்யப்பட்டார். சாம் பாம்பே பூனத்தை தாக்கியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பூனத்தின் முகத்தில் பலத்த காயங்கள் இருந்ததால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், பின்னர் சாம் பாம்பே சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார்.


ALSO READ |  நிர்வாண வீடியோ வெளியிட்ட சர்ச்சை நடிகை....மொய்க்கும் நெட்டிசன்ஸ்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR