தனுஷ் முதன் முதலாக இயக்கியுள்ள ‘பவர் பாண்டி’ திரைப்பட டிரைலர் ஒரே நாளில் ஒரு மில்லியன் ரசிகர்கள் கண்டு ரசித்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகராகவும், தயாரிப்பாளராகவும் முத்திரை பதித்த தனுஷ், அடுத்தக்கட்டமாக இயக்குநர் அவதாரமெடுத்துள்ளார். ராஜ் கிரண் கதாநாயகனாக நடித்துள்ள, பவர் பாண்டி என பெயரிடப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.


தற்போது அந்த படம் ரிலீசுக்கு தயாராகிவிட்ட நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது.


பவர்பாண்டி டிரைலர் வெளியிடப்பட்ட ஒரே நாளில் மில்லியன் ரசிகர்கள் கண்டு ரசித்துள்ளனர். கிட்டத்தட்ட முன்னணி ஹீரோ படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு பவர்பாண்டி படத்திற்கு கிடைத்துள்ளதால், இயக்குனர் தனுஷ் உற்சாகமடைந்துள்ளார்.


இந்த படத்தை ஏப்ரல் 14-ம் தேதி வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.