பிரபாஸ் நடிப்பில் உருவாகிவரும் 'சாஹூ' படத்தின் நாயகியாக ஷ்ரதா கபூர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பாகுபலியை அடுத்து தொடர்ந்து 'சாஹூ' படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கினார் பிரபாஸ். ரூ. 150 கோடி பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என 3 மொழிகளில் 'சாஹூ' உருவாகி வருகிறது. சுஜீத் இயக்கும் இப்படத்தை வம்சி மற்றும் பிரமோத் இருவரும் இணைந்து தயாரித்து 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வருகிறார்கள்.


இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக மதி, கலை இயக்குனராக சாபு சிரில் மற்றும் இசையமைப்பாளராக சங்கர் - இசான் - லாய் இணை 


பணிபுரியவுள்ளது குறிப்பிடத்தக்கது.


பிரபாஸின் முதல் ஹிந்திப் படமாக சாஹூ குறிப்பிடப்படுவதால், இது ஹிந்தியில் டப் செய்யப்படுவதற்குப் பதிலாக தெலுங்கு, தமிழ் போல ஹிந்தியிலும் தனியாகப் படமாக்கப்படுகிறது. 


இந்நிலையில் பாகுபலி படத்துக்குப் பிறகு பிரபாஸின் சம்பளம் குறித்து பல்வேறு தகவல் வெளிவருகின்றன. ரூ.,150 கோடி செலவில் உருவாகும் சாஹூ படத்தில் பிரபாஸின் சம்பளம், ரூ. 30 கோடி என்று சமீபத்திய தகவல் தெரிவிக்கிறது. ஷ்ரதா கபூருக்கு ரூ. 9 கோடி என முடிவு செய்யப்பட்டுள்ளது.