Premalu Actress Mamitha Baiju Interview About Bala Hitting Her During Vanangaan Shooting : தமிழ் திரையுலகில் முக்கிய இயக்குநர்களின் லிஸ்டில் பெரிய இடத்தை பெற்றிருப்பவர், பாலா. 90களிலும் 2000 கால கட்டங்களிலும் வெளிவந்த இவரது திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்று, கிளாசிக் படைப்புகளின் லிஸ்டில் இடம் பெற்றுள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வணங்கான் திரைப்படம்:


சுமார் 24 வருடங்களுக்கும் மேலாக, தமிழ் திரையுலகில் முக்கிய இயக்குநராக இருப்பவர், பாலா. இவரது படங்கள் பாக்ஸ் ஆபிஸ் கலக்ஷனில் வெற்றி பெறுகிறதோ இல்லையோ, கண்டிப்பாக பார்ப்பவர்களின் மனங்களை பாதித்து விடும். அந்த அளவிற்கு ஆழமான, அழுத்தமான கதைகளை தருவதற்கு பெயர் போனவர் இவர். பாலா, கடந்த சில மாதங்களாக இயக்கி வரும் படம், வணங்கான். இந்த படத்தில் தற்போது அருண் விஜய் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் மலையாள நாயகி ஒருவர் நடித்து வந்தார். அப்போது படப்பிடிப்பின் போது பாலாவுடன் ஏற்பட்ட அனுபவத்தை அவர் பகிர்ந்திருக்கிறார். அது என்ன தெரியுமா? 


நாயகியை அடித்த பாலா? 


வணங்கான் படத்தில் மலையாள நடிகை மமிதா பைஜூ நடித்திருந்தார். இவர், கேரளாவில் பெரிதும் ஹிட் ஆன நாயகி ஆவார். தற்போது வெளியாகி தமிழகத்தில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மலையாள படம்,‘பிரேமலு’. இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்து தற்போது தமிழ் ரசிகர்கள் மனங்களை பரவலாக கவர்ந்து வருகிறார். 


நடிகை மமிதா பைஜூ, வணங்கான் படத்திலும் நடித்திருக்கிறார். சமீபத்தில் தான் கலந்து கொண்ட நேர்காணலில் இயக்குநர் பாலாவின் படத்தில் நடித்த அனுபவம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அப்போது, மேளம் அடித்துக்கொண்டே பாடுவது போல ஒரு காட்சி படமாக்கப்பட்டிருக்கிறது. அதில் எப்படி நடிப்பது என தனக்கு சரியாக தெரியவில்லை என்றும், அதை படம் பிடிக்க ஆரம்பித்த போது 3 டேக் ஆனதாகவும், அருகில் இருந்து ஒருவர் கற்றுக்கொடுத்தும் தனக்கு அது வரவில்லை என்றும் கூறியுள்ளார். அப்போது, இயக்குநர் பாலா தனது முதுகில் கோபமாக தட்டியதாகவும் கூறியுள்ளார். 



மேலும் படிக்க | Malavika Mohanan: மாளவிகா மோகனனுக்கு விரைவில் திருமணமா? உண்மை என்ன?


சூர்யா என்ன சொன்னார்? 


வணங்கான் படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தவர், சூர்யா. இவரது தயாரிப்பு நிறுவனமான ‘2டி எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம்தான் இந்த படத்தை தயாரிக்க இருந்தது. ஆனால், ஒரு சில காரணங்களினால் சூர்யா இந்த படத்தில் இருந்து விலகியதால் இப்படத்தை தற்போது ‘காமாட்சிஸ் வி ப்ரொடக்ஷன் ஹவுஸ்’ நிறுவனம் தயாரித்து வருகிறது. 



நடிகை மமிதா, தனது நேர்காணலில் சூர்யா குறித்தும் பேசியுள்ளார். அதில், சூர்யா படத்தில் இருந்து விலகிய பிறகுதான் தானும் விலகியதாக கூறியிருக்கிறார். நடிகையின் நேர்காணல் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 


நடிகர்களை இழிவாக நடத்துகிறாரா பாலா? 


இயக்குநர் பாலா மீது பல நாட்களாகவே நடிகர்கள் ஒரு குற்றச்சாட்டினை எடுத்து முன்வைக்கின்றனர். இவரது படங்களில் நடிப்பவர்களை, படப்பிடிப்பின் பாேது அவர் கடுமையான சொர்க்களால் பேசுவதாகவும், அவர்களை சமயங்களில் அடிப்பதாகவும் கூறப்படுகிறது. ‘பரதேசி’ படப்பிடிப்பின் பாேது அப்படத்தின் ஹீரோ அதர்வா உள்பட, பிற துணை நடிகர்களை இவர் அடிப்பது போன்ற காட்சிகள் இணையத்தில் சில வருடங்களுக்கு முன்பு வைரலானது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | தளபதி விஜய் நிராகரித்து பின்னால் பிளாக்பஸ்டர் ஹிட்டான திரைப்படங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ