விஜய், நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் பீஸ்ட் திரைப்படம் உருவாகி அடுத்த வாரம் திரைக்கு வர இருக்கிறது. இந்தப் படத்தின் டிரைலர் கடந்த வாரம் வெளியான நிலையில் அதில் காவி துணியை விஜய் கிழிப்பது போன்ற காட்சி ஒன்று அமைந்திருந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தப் படத்தை டிவிட்டரில் விஜய் ரசிகர்கள் ஷேர் செய்து காவியை விஜய் கிழிக்கிறார் என்று கொண்டாடிக் கொண்டிருந்தனர். இந்த விஷயம் எதேர்ச்சையாக நடந்ததா அல்லது விஜய் திட்டமிட்டு இவ்வாறு செய்தாரா என்று கேள்வி எழுந்துள்ளது.


மேலும் படிக்க | நஷ்டத்துக்கு காரணம் தனுஷ்தான்... அதிருப்தியில் ஹாட்ஸ்டார்?


இந்நிலையில் அந்த காவித் துணியில் பிரதமர் மோடியின் படம் இடம்பெறும் வகையில் யாரோ போட்டோஷாப் செய்திருக்க, அதையும் விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். பாஜக-வை எதிர்க்க வருகிறார் விஜய் என்ற ரீதியில் அவர்களது கோஷங்கள் இருக்கின்றன.


மேலும் படிக்க | பூஜையுடன் தொடங்கியது தளபதி 66 - ஒருவாரம் சென்னையில் படப்பிடிப்பு


இதனையடுத்து படத் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே. கோபி இப்படி பிரதமரின் படத்தை இழிவுபடுத்தும் விஜய் ரசிகர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கவுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து விஜய் மக்கள் இயக்கத் தலைவர் புஸ்ஸி ஆனந்தின் கவனத்திற்கு கொண்டு சென்றிருப்பதாக ஜே.எஸ்.கே.கோபி பதிவிட்டுள்ளார்.


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR