ரஜினிகாந்த நடிப்பில் உருவாகியுள்ள 'பேட்ட' திரைப்பட கேரளா வெளியீட்டு உரிமையை நடிகர் பிரித்திவி ராஜ் பெற்றுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தல் நடிகர் ரஜினிகாந்த நடித்துவரும் திரைப்படம் "பேட்ட". இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். விஜய் சேதுபதி, சிம்ரன், நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். இப்படத்தின் மூலம் முதன்முறையாக ரஜினியின் படத்துக்கு இசையமைத்துருக்கிறார் அனிருத். 


இத்திரைப்படத்திற்கு U/A சான்றிதழ் கிடைத்துள்ள நிலையில், இப்படம் வரும் ஜனவரி 10-ஆம் நாள் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.


தமிழகத்தில் வெளியாகும் அன்றைய தினம் இத்திரைப்படம் கேரளாவிலும் வெளியாகிறது. கேரளாவின் வெளியீட்டு உரிமையினை மலையாள நடிகர் பிரித்திவி ராஜ் பெற்றுள்ளார்.



ஆகஸ்ட் சினிமாஸ் நிறுவனத்தில் பங்குதாரராக இருந்து பிரித்திவிராஜ் தர்போது பிரித்திவி ராஜ் ப்ரடக்சன்ஸ் என்ற பெயரில் தனியாக தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, தனது 'நைன்' திரைப்படத்தினை தயாரித்து வருகின்றார். இதற்கிடையில் தற்போது ரஜினியின் பேட்ட திரைப்பட விநியோக உரிமையினை பெற்றுள்ளார்.


இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், கேரளாவில் சுமார் 200 திரையரங்குகளில் பேட்ட வெளியிடப்படும் எனவும், லிஸ்டின் ஸ்டீபனின் மேஜிக் பிரேம்ஷ் நிறுவனத்துடன் இணைந்து திரைப்படத்தினை வெளியிடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.