இணையப்புகழ் பிரியா பிரகாஷ் வாரியரின் சமீபத்திய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைராலக பகிரப்பட்டு வருகிறது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புருவத்தை சற்றே அசைத்து, உலக அளவில் ரசிகர் பலரை பெற்றவர் பிரியா வாரியர். மளையள திரையுலகில் விரைவில் வெளியாக இருக்கும் காதல் திரைப்படம் ‘ஒரு ஆடர் லவ்’. அந்த படத்தின் இடம் பெற்றுள்ள 'மாணிக்ய மலரே பூவி' பாடலில் புருவத்தை உயர்த்தி கண் அடித்து இளைஞர்களை சுண்டியிழுத்தார் இவர்.


குறுகிய காலத்திலேயே பெரும் புகழை எட்டிய இவரின் பெயரை பயன் படுத்தினாலே பேஸ்புக்கில் லைக்ஸ் கொட்டி தள்ளுகிறது.



இந்நிலையில் இவர் தற்போது இவரது சமீபத்திய புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றியுள்ளார். சமீபத்தில் தமிழகத்தின் திண்டுக்கல் நகர்ரரத்தில் நடைப்பெற்ற திருமணம் நிகழ்வில் பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்ச்சியில் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தினில் பதிவேற்றியுள்ளார்.


இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது. முன்னதாக இவரும், இவரது இணை நடிகர் ரோஷனும் இணைந்து வெளியிட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.