பாலிவுட் திரையுலகையும் அதில் ஆதிக்கம் செலுத்தும் சில பிரபலங்கள் குறித்தும் எந்த வித பயமும் இன்றி பேட்டி கொடுத்து வருபவர், பிரியங்கா சோப்ரா. பாலிவுட்டில் நிகழும் நெப்போட்டிசம், இன வெறி உள்ளிட்ட பல விஷயங்களை தனது நேர்காணல்கள் மற்றும் பாட்கேஸ்ட் பேட்டிகளில் கூறிவருகிறார். நிக் ஜோனஸை திருமணம் செய்து கொண்ட இவர், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்து வருகிறார். பிரியங்கா-நிக் ஜோனசிற்கு மால்தி மேரி என்ற குழந்தை உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரியங்கா விவரிக்கும் பாலிவுட் கொடுமைகள்:


பிசியாக ஹாலிவுட்டில் படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் பிரியங்கா, முதலில் பாலிவுட்டில்தான் முன்னணி ஹீரோயினாக இருந்தார். பாலிவுட்டில் தான் நடித்துக்கொண்டிருந்த காலங்களில் எப்படியெல்லாம் தனது நிறத்தை வைத்து ஏளனம் செய்தனர், பாலிவுட்டில் எவ்வாறு நெப்போட்டிசம் தலைத்தூக்கியுள்ளது என்பது குறித்து பல இடங்களில் கூறியுள்ளார். குறிப்பாக பாலிவுட் பிரபலமான கரண் ஜோஹருக்கும் பிரியங்கா சோப்ராவிற்கும் நெடுநாட்களாக தீர்க்கப்படாத பகை உள்ளதாக சிலர்  தெரிவிக்கின்றனர். பிரியங்கா பாலிவுட்டிற்கு எதிராக பேசுவதால், பல ரசிகர்கள் இவரை விரும்புவதில்லை. 


மேலும் படிக்க | Nitesh Pandey: பாலிவுட்டை துரத்தும் சோகம்..ஓட்டல் அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த இந்தி சீரியல் நடிகர்..!


ஆடைகளை அகற்ற சொன்ன இயக்குநர்:


இவர், ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு சமீபத்தில் பேட்டியளித்திருந்தார். அதில், தன்னை ஆடைகளை அகற்ற சொல்லி ஒரு பாலிவுட் இயக்குநர் வற்புருத்தியதால் ஒரு படத்தில் நடிப்பதிலிருந்து விலகி விட்டதாக கூறியுள்ளார். பிரியங்காவின் கூற்று பாலிவுட் திரையுலகம் மட்டுமன்றி அனைவரிடத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 


நடந்தது என்ன?


பிரியங்கா தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளதன் படி, அவர் 2002-2003ஆம் ஆண்டு சினிமாவிற்கு புதிதாக நடிக்க வந்த தருணத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அப்படி செய்தது எந்த இயக்குநர் எந்த படத்திற்காக என்பதை அவர் குறிப்பிடவில்லை. “அந்த படத்தின் கதையின்படி நான் அண்டர்கவர் காவல் அதிகாரி. ஒரு காட்சி, நான் ஒரு ஆளை மயக்கும் படி அமைக்கப்பட்டிருந்தது. அந்த அதிகாரி, பெண் அண்டர்கவர் அதிகாரி என்றாலே ஒரு ஆளை மயக்கி தானே ஆக வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தார். அக்காட்சியின் படி நான் ஒவ்வொரு துணியாக கழட்ட வேண்டும். நான் அந்த காட்சிக்கு ஏற்றவாறு நிறைய ஆடைகளை அணிய விரும்பினேன். ஆனால் அந்த இயக்குநரோ, ‘இல்லை எனக்கு அவளது உள்ளாடையை பார்க்க வேண்டும். அப்படி எதுவும் இல்லை என்றால் வேறு எதற்காக படம் பார்க்க வரப்போகின்றனர்?’ என்று அந்த இயக்குனர் கூறினார்” இவ்வாறாக பிரியங்கா தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். 


மனிதாபிமானம் அற்ற செயல்!


மேற்கூறிய சம்பவம் குறித்து பேசிய பிரியங்கா, தொடர்ந்து “அவர் அப்படி என் எதிரிலேயே அங்கிருந்த ஒப்பனையாளரிடம் அப்படி பேசியதாக குறிப்பிட்டிருந்தார். இது எனக்கு மனிதாபிமானமற்ற செயலாக தோன்றியது” என்று குறிப்பிட்டார். மேலும், அந்த படத்தில் இரண்டு நாட்களுக்கு மேல் நடிக்கவில்லை என்றும் தன்னை தேர்ந்தெடுத்த தயாரிப்பு நிறுவனத்திற்கு பணத்தை திரும்ப கொடுத்து விட்டதாகவும் அந்த நேர்காணலில் பிரியங்கா குறிப்பிட்டார். 


பாலிவுட்டை விட்டு பிரியங்கா விலகியதற்கான காரணம்:


சில மாதங்களுக்கு முன்னர் பிரியங்கா ஒரு நேர்காணலில் கலந்து கொண்டார். அதில் அவரிடம் பாலிவுட்டை விட்டு விலகியதற்கான காரணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.  அதற்கு அவர், “என்னை திரைத்துறையின் மூலையில் தள்ளிவிட்டனர். என்னை நடிகையாக தேர்ந்தெடுக்க யாருமே முன்வரவில்லை. இதனால் எனக்கும் ஒரு சிலருக்கும் பகை ஏற்பட்டது. என்னால் அந்த விளையாட்டை விளையாட முடியவில்லை. திரைத்துறையில் இருந்த அரசியல் பிடிக்காமல்தான் ‘எனக்கு ப்ரேக் தேவைப்படுகிறது’ எனக்கூறிவிட்டேன்” என்று கூறினார் பிரியங்கா. 


மேலும் படிக்க | John Wick 4: ஓடிடியில் வெளியாகிறது ஜான் விக் 4..எந்த தளத்தில் எப்போது பார்க்கலாம்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ