நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பாக வெளியான தெலுங்குப் படமான புஷ்பா வசூல் ரீதியாகப் பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இப்படத்தின் பாடல்கள் இணையத்தில் ட்ரெண்டிங் அடித்தன. இதில் “புஷ்பானா ஃபிளவர்னு நினைச்சிங்களா; ஃபையரு” என அல்லு அர்ஜூன் பேசிய வசனமானது சினிமா வட்டாரத்தில் மட்டுமல்லாமல் அரசியல் வட்டாரத்திலும் கவனம் பெற்றது. புஷ்பா இந்திய அளவில் பாப்புலர் ஆன நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கும் பணிகள் நடந்துவந்தன.


இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்புகளை நிறுத்த இயக்குநர் சுகுமார் முடிவுசெய்துள்ளாராம். இந்தத் திடீர் நிறுத்தத்துக்கான காரணம்தான் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது இயக்குநர் சுகுமார் அண்மையில் வெளியான யஷ்ஷின் கே.ஜி.எஃப்- 2 படத்தை பார்த்தாராம்.


மேலும் படிக்க| 'KGF'- ல நம்ம தினேஷ் கார்த்திக்கா?! - நெட்டிசன்ஸின் வேற லெவல் கண்டுபிடிப்பு!


                                                  


 


அப்படம் மேக்கிங் ரீதியாக மிரட்டியுள்ளதால் புஷ்பா- 2விலும் அதேபோல பிரம்மாண்டக் காட்சிகள் இருந்தால் நன்றாக இருக்கும் எனக் கருதிய அவர் இதற்காகக் திரைக்கதையில் சில திருத்தங்கள் செய்து அதன் பின்னர் படப்பிடிப்பை நடத்தத் திட்டமிட்டுள்ளாராம். அதேபோல இப்படத்தின் பட்ஜெட்டையும் உயர்த்த படக்குழு முடிவுசெய்துள்ளதாம்.


படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதால் அல்லு அர்ஜூன் இந்தக் கேப்பில் மற்றொரு படத்தில் நடிக்கவுள்ளதாகவும் அதன் பிறகே சுகுமாரின் புஷ்பா- 2 வில் இணையவுள்ளதாகவும் கூறப்படுகிறது.


மேலும் படிக்க | கமல்- சூர்யாவை இணைக்கும் விக்ரம்- புதிய அப்டேட்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR