ரஜினிகாந்த் வரும் ஜூலை மாதம் இறுதியில், அவரின் அரசியல் கட்சியின் பெயரை அறிவிப்பார் என ரஜினியின் சகோதரர் சத்யநாராயண ராவ் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பெங்களூருவில் உள்ள ரஜினியின் சகோதரர் சத்யநாராயண ராவ் தெரிவிக்கையில், “ஜூலை மாதம் இறுதியில் ரஜினி அவரின் அரசியல் கட்சியின் பெயரை அறிவிப்பார். இதற்கான முதல் கட்ட நடவடிக்கையாக தான் தன் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள், நலம் விரும்பிகள் மற்றும் ரசிகர் மன்ற நிர்வாகிகள், உறுப்பினர்களை சந்தித்துப் பேசியுள்ளார்.


அரசியலில் அமைப்பு சரியில்லை என தெரிவித்துள்ள ரஜினிகாந்த், அதை மாற்றும் முனைப்புடன் களமிறங்குவார்.” என தெரிவித்துள்ளார்.


20 வருடங்களாக அரசியலுக்கு வருவாரா? இல்லையா? என தெரியாமல் தவித்து வந்த ரஜினி ரசிகர்களுக்கு, போர் வரும் போது பார்த்துக் கொள்ளலாம். தயாராக இருங்கள் என தெரிவித்ததை அடுத்து, அவர் அரசியலில் ஈடுபடுவார் என நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.


ரஜினி ரசிகர்களின் நம்பிக்கையை மெய்பிக்கும் வகையில் அவரது சகோதரர் ஜூலையில் ரஜினி கட்சியை தொடங்குவார் என தெரிவித்திருப்பது பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.