படம் பார்த்துவிட்டு பாராட்டிய ரஜினி - உற்சாகத்தில் ஹீரோ
டாணாக்காரன் படம் பார்த்துவிட்டு ரஜினி பாராட்டியதால் விக்ரம் பிரபு உற்சாகத்தில் இருக்கிறார்.
வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் தமிழ். காவல் துறையில் பணியாற்றி அந்தப் பணியை துறந்துவிட்டு சினிமாவுக்கு வந்தவர். இவர் விக்ரம் பிரபு, அஞ்சலி நாயர், எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்டோரை வைத்து ‘டாணாக்காரன்’ என்ற தனது முதல் படத்தை இயக்கினார்.
காவலர் பயிற்சி மையத்தில் காவல் துறையினர் எப்படி உருவாக்கப்படுகின்றனர், அங்கு நிலவும் அவலங்கள், ஏற்றத்தாழ்வுகள், பிரச்னைகள் என புதிய கதைக்களத்தை எடுத்து படமாக்கினார்.
ஹாட் ஸ்டாரில் வெளியான இப்படத்துக்கு ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்துள்ளனர். இயக்குநர் தமிழுக்கும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்துவருகின்றனர்.
மேலும் படிக்க | பீஸ்ட் பார்த்த ரஜினி... என்ன முடிவு எடுக்கப்போகிறார்?
இந்நிலையில் டாணாக்காரன் படத்தை பார்த்த ரஜினி, விக்ரம் பிரபுவுக்கு தொலைபேசியில் அழைத்து தனது பாராட்டை தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து விக்ரம் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில், “டாணாக்காரன் படத்தில் எனது நடிப்பிற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொலைபேசியில் தொடர்புகொண்டு என்னை பாராட்டியது அற்புதமான உணர்வை அளித்தது.
நான் கனவில்கூட இதை நினைத்துப் பார்க்கவில்லை. உங்கள் ஆர்வத்தைப் பின்பற்றி முன்னேறி செல்லும்போது வாழ்க்கையில் இதுபோன்ற அற்புதமான நிகழ்வுகள் நடக்கும்” என குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும் படிக்க | பீஸ்ட் ஹிட்டா ஃப்ளாப்பா... தயாரிப்பு நிறுவனம் சொல்வது என்ன?
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR