சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா ஓட்டிச் சென்ற கார், ஆட்டோ ஒன்றின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை ஆழ்வார்பேட்டையில் நின்று கொண்டிருந்த ஆட்டோ மீது சவுந்தர்யாவின் கார் மோதியது. இந்தவிபத்தில் ஆட்டோவில் தூங்கி கொண்டிருந்த டிரைவர் மணி காயமடைந்தார். 


நடிகர் தனுஷ் நேரில் சென்று சமரசம் செய்ததால், காவல்துறையில் இந்த விபத்து தொடர்பாக புகார் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.