பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்திற்கு முழு ஆதரவு அளிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தினில் பதிவிட்டுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மகாத்மா காந்தி அவர்களின் 145-வது பிறந்த நாளான அக் 2, 2014 -ஆம் நாள் தூய்மை இந்தியா திட்டத்தினை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். 


இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் இத்திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பிரபலங்கள் பலரையும் தூதர்களாக நியமிக்கப்பட்டனர். மேலும் பிரபங்கள் பலரும் தங்களது ஆதரவினை வெளிப்படுத்தும் வகையினில் தங்களது சமுக வலைத்தளங்கள் மூலமும் பல பதிவுகளை பதிவிட்டு வந்தனர்.


இந்நிலையில் தற்பொழுது நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தினில் தூய்மை இந்தியா திட்டத்திற்கு முழு ஆதரவு அளிப்பதாக பதிவிட்டுள்ளார்.


 



 


நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா இல்லையா? ஆளும் பாஜக-வுடன் இனைவாரா மாட்டாரா? என பல கேள்விகள் தமிழக மக்களை குழப்பிவரும் நிலையில் பாஜக-விற்கு ஆதரவாக தற்பொழுது இவர் பதிவிட்டுள்ளது மீண்டும் மக்களை குழப்பத்தினில் ஆழ்த்தியுள்ளது.