நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள 'நெருப்புடா' படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த விழாவில், நடிகர்கள் பிரபு, விஷால், லாரன்ஸ், தனுஷ், சத்யராஜ், இயக்குநர் விக்ரமன், 'நெருப்புடா' படத்தின் கதாநாயகி நிக்கி கல்ராணி ஆகியோர் பங்கேற்றனர்.


இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் கலந்துக்கொண்டார். அப்போது அவர் 'அண்ணாமலை' படத்தில் நடிகர் சிவாஜி கணேசனை மனத்தில் வைத்தே நடித்தேன். சிவாஜி சார் உயிரோடு இருக்கும் வரை அவருக்குப் போட்டியே இருந்ததில்லை. சிவாஜி குடும்பத்தின் பாரம்பர்யத்தைக் காக்கும் சுமை, விக்ரம் பிரபுவுக்கு இருக்கிறது' என்றார்.


மேலும் அவர் ' ஒரு படத்தை நீங்கள் தாராளமாகத் திரைப்படத்தை விமர்சிக்கலாம். ஆனால், விமர்சிக்கும்போது பயன்படுத்தும் வார்த்தையில் கவனம் வேண்டும். மனத்தைக் காயப்படுத்தாத வகையில் விமர்சியுங்கள்' என்றார்.