தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜா, மகதீரா என்ற படம் மூலம் அறிமுகமாகி இன்று தெலுங்கு சூப்பர் ஸ்டாராக உயரும் அளவிற்கு வளர்ந்து விட்டார். இவர் நடித்திருந்த ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் இந்த வருடத்தின் ஆஸ்கர் விருதையும் தட்டிச்சென்றது. இவருக்கும் அப்போலோ மருத்துவமனை குழுமத்தின் தலைவர், பிரதாப் சி.ரெட்டியின் பேத்தியான உபாசனா காமினேனிக்கும் 2012 ஆம் ஆண்டு திருமணம் நடைப்பெற்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராம் சரணுடன் திருமணம் ஆன புதிதில் பலவித விமர்சனங்களை எதிர்கொண்டார் உபாசனா. மகதீரா படத்தின் ரிலீஸிற்கு பிறகு ராம் சரண் புகழின் உச்சியில் இருந்த காலம் அது. அவரை திருமணம் செய்து கொண்ட உபாசனா கொஞ்சம் கூட அவருக்கு பொருத்தமானவராக இல்லை என பலரும் தங்களது வாய்க்கு வந்தவாறு பேசினர். திருமணம் ஆகி பல வருடங்கள் ஆகியும் இவர்களுக்கு இன்னும் குழந்தை இல்லை என்ற பிற்போக்குத்தனமாக விமர்சனங்களையும் இவர்கள் சந்தித்தனர். இந்த நிலையில், உபாசனா கர்பமாக இருப்பதாக அவரது குடும்பத்தினர் தங்களது சமூக வலைதள பக்கங்களில் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். சமீபத்தில்தான் உபாசனாவிற்கு வளைகாப்பு வைபோகமும் நடைப்பெற்றது. 


மேலும் படிக்க | தாலியுடன் ஷாக் கொடுத்த பரணி! அண்ணா சீரியலில் சௌந்தர பாண்டி வைத்த செக்மேட்


உபாசனா, சமீபத்தில் ஒரு ஊடகத்திற்கு பேட்டி அளித்திருந்தார். அதில், அவரது தாமதமான கர்பம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், திருமணமான புதிதிலேயே குழந்தை மற்றும் வாழ்க்கையில் தாங்கள் சாதிக்க வேண்டிய பல விஷயங்கள் குறித்து பேசியதாக கூறினார். “நாங்கள் இருவரும் தொழில் ரீதியாக எங்களுக்கு வேண்டிய இடத்தை பிடித்த பிறகே குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என முடிவு செய்தோம். அதைத்தான் இப்போதும் செய்திருக்கிறோம். நான் தாயாக வேண்டும் என முடிவு செய்ததில் மிகவும் பெருமையடைகிறேன்” இவ்வாறாக தனது பேட்டியில் கூறியுள்ளார் உபாசனா. மேலும், எங்களது குழந்தைக்கு தேவையான வாழ்க்கையை நாங்கள் தர வேண்டும் என நினைத்ததால் தான் தாமதமாக தாயாக முடிவு செய்ததாக தெரிவித்து இருந்தார் உபாசனா. 


அந்தவகையில் ராம் சரண், உபாசனா தம்பதியினருக்கு கடந்த ஜூன் 20 ஆம் தேதி அழகான பெண் குழந்தை பிறந்தது. ஜூபிலி ஹில்ஸில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தான் இவர்களது குழந்தை பிறந்தது. திருமணமாகி 11 ஆண்டுகளுக்கு பின்னர் முதல் குழந்தையை பெற்றெடுத்த ராம்சரண் மற்றும் உபாசனா ஜோடிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தனர்.


இந்த நிலையில் தற்போது ராம்சரண் மற்றும் அவரது மனைவி உபாசனா ஆகியோர் தங்களுடைய பெண் குழந்தைக்கு சூட்டியுள்ள பெயரை, அதிகாரப்பூர்வமாக சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளனர். நேற்று  ராம்சரண் - உபாசனா ஜோடி, தங்களின் குழந்தையின்  பெயர் வைக்கும் விழா கொலாகலமாக நடைபெற்றது. விழாவை நிறைவு செய்த பின்னர், குழந்தைக்கு ‘க்ளின் காரா கோனிடேலா’ என வித்தியாசமாக பெயர் வைத்துள்ளனர்.  இது குறித்து புகைப்படங்களுடன் இணையத்தில் ராம் சரண் குடும்பத்தினர் பதிவிட்டனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வியர்க்கின்றது.



மேலும் படிக்க | டிராமா போடும் முத்துப்பாண்டி.. கண்ணீருடன் சண்முகத்துக்கு அதிர்ச்சி கொடுத்த பரணி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ