இந்தி சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை ரத்தன் ராஜ்புத், தான் நடிக்க வாய்ப்பு கேட்டு ஒருவரை சந்திக்க சென்ற போது தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார். பாலிவுட் திரையுலகை சேர்ந்த பிரபலமான சீரியல் நடிகை, ரத்தன் ராஜ்புத். இவர், ஆக்லே ஜனம் மோஹே பித்தியா ஹீ கிஜோ என்ற தொடர் மூலம் பிரபலமானவர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரத்தன் ராஜ்புத்:


பாலிவுட் சினிமா கலைஞர்களுக்கு எந்த அளவிற்கு பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளதோ, அதே போல இந்தி சீரியலில் நடிப்பவர்களுக்கும் அங்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. அப்படி பிரபலமான கலைஞர்களுள் ஒருவராக வலம் வருபவர் ரத்தன் ராஜ்புத். இவர், பல மொழிகளில் பிரபலமான மகாபாரத தொடரில் அம்பா எனும் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். பிக்பாஸ் உள்பட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். இவர், தனக்கு நேர்ந்த அனுபவம் குறித்து பேசியுள்ளார். 


மேலும் படிக்க | தயாரிப்பாளர்களை ஏமாற்றிய விவகாரம்-முதல் முறையாக வாய் திறந்த பிரபல நடிகர் சுதீப்..!


நடிக்க வாய்ப்பு..


திரையுலகிற்கு வந்த புதிதில் ரத்தன் ராஜ்புத்திற்கு நடிக்க ஒரு வாய்ப்பு வந்துள்ளது. அப்போதுதான் அந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது குறித்து பேசியுள்ள அவர், குறிப்பிட்ட ஒரு தொடரில் நடிக்க, நடிகர்கள் தேர்வுக்காக ஒரு ஹோட்டலுக்கு சென்றதாகவும் அங்கு தன்னை போல பல நடிகர்களை பார்த்ததாகவும் குறிப்பிட்டார். அந்த ஆடிஷனில் கலந்து கொள்ள அவர் தனது நண்பருடன் சென்றுள்ளார். அங்கு இவர்களுக்கு ஏதோ ஒரு குளிர்பானம் வழங்கப்பட்டு அதை கண்டிப்பாக குடிக்க வேண்டும் என வற்புறுத்தியுள்ளனர். அதனால் இவரும் கொஞ்சமாக அதை குடித்துளார். அப்போதே அதில் ஏதோ கலந்துள்ளது என்பது தனக்கு தெரிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். பின்னர் இவரை வேறு ஒரு ஹோட்டலுக்கு அவர்கள் ஆடிஷனுக்கு அழைத்ததாகவும் அங்கு சென்று பார்த்தபோது ஒரு பெண் மயக்க நிலையில் கிடந்ததாகவும் தெரிவித்தார். அங்கு ஏதோ நடந்துள்ளது என்பதை தான் உண்ர்ந்து கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 


அவரை பார்த்த அந்த இயக்குநர் “காதலன் இல்லாமல் எங்கும் வரமாட்டாயா..?” என கோபமாக திட்டியதாகவும் அதற்கு இவர் அவரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு அது தனது சகோதரர் என கூறியபடி வேகமாக அங்கிருந்து ஓடி வந்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். 


“மீடூ விவகாரத்தின் போது கூட பேசவில்லை..”


இந்த சம்பவம் நடந்து பல ஆண்டுகள் ஆனதாகவும் தன்னால் இதுகுறித்து மீடூ பிரச்சனையின் போது கூட பேசமுடியவில்லை என்றும் கூறியுள்ளார். இதுபற்றி வெளியில் கூறினால் தனக்கு நடிக்க வாய்ப்புகள் கிடைக்காமல் போய் விடுமோ என தான் பயந்ததால் இந்த விஷயத்தை பேச இத்தனை வருடங்கள் பிடித்து கொண்டதாக அவர் கூறியுள்ளார். தற்போது இளம் தலைமுறையினர் பலர் தன்னிடம் இருந்து பல விஷயங்கள் குறித்து கற்றுக்கொள்ள ஆசைப்படுவதாகவும் அதனால் அவர்களுக்கு இது குறித்த புரிதலை உருவாக்க வேண்டும் என்பதற்காக இதை இப்போது சொன்னதாகவும் கூறியுள்ளார். சினிமா துறையில் ஒரு சிலர் அப்படி இருப்பதால் இதில் இருக்கும் அனைவரும் கெட்டவர்கள் என்று ஆகிவிடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 


மேலும் படிக்க | ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மானை விட அதிகம் சம்பளம் வாங்கும் அனிருத்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ