RRR படம் கடந்த மாத இறுதியில் வெளியாக உலக அளவில் வசூலை வாரிக்குவித்து வருகிறது. இந்த படம் 1000 கோடி ரூபாய் வசூலை ஈட்டிய நிலையில், அதனை படக்குழுவினர் பிரம்மாண்ட பார்ட்டி மூலம் கொண்டாடினர். முன்னணி பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் RRR படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக நடித்த பாலிவுட் நடிகை ஆலியா பட் கலந்து கொள்ளாதது சர்ச்சையாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ‘அஜித்-61’ : கதை பிறந்த பின்னணி இதுதான்! 3ஆவது முறையாக க்ரீன் சிக்னல்!


பாகுபலி படத்துக்குப் பின் இயக்குநர் ராஜமெளலி RRR படத்தை பிரம்மாண்டமாக இயக்கினார். ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்தனர். இதில் ராம்சரணுக்கு ஜோடியாக ஆலியா பட் நடித்துள்ளார். ஆனாலும் படத்தில் காதல் காட்சிகள் எல்லாம் இல்லை. ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆருக்கு இடையேயான நட்பு, சுதந்திரம் அடைய ஆயுதம் வேண்டும் என ராம்சரண் போராடுவது என கதை இப்படியே நகரும். கடந்த மார்ச் 25-ம் தேதி வெளியான இந்த படம் பாகுபலியையே மிஞ்சும் அளவுக்கு வசூலை ஈட்டியது. 



இதெல்லாம் ஒருபக்கம் இருக்க பாலிவுட்டில் முன்னணி நாயகியான ஆலியா பட் முதல்முறையாக தென்னிந்திய படத்தில் நடித்தார். ஆனால் அவரது கதாபாத்திரம் பாகுபலியில் காட்டப்பட்ட அவந்திகா, தேவசேனா போல அழுத்தமாக இல்லாமல் எதற்கு இவர் நடித்தார் என்பது போல விமர்சனங்கள் எழுந்தன. அதுவும் படத்தில் ஒருசில நிமிடங்களே ஆலியா நடிக்கும் காட்சிகள் இடம்பெற்றன. 



சில நாட்களுக்கு முன்பு ஆலியா பட் RRR படம் குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தின் தான் பதிவிட்ட புகைப்படங்களை நீக்கினார். அதோடு இயக்குனர் ராஜமெளலியையும் அன்பாலோ செய்தார். உடனே ஆலியா பட் ராஜமெளலி மீது கோவத்தில் உள்ளதாக மீடியாக்களில் செய்திகள் வெளியாகின. ஆனால் அதற்கு விளக்கம் அளித்த ஆலியா பட், தனது இன்ஸ்டா பக்கத்தில் குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு பழைய புகைப்படங்களை டெலீட் செய்வது தனது வழக்கம் என்றும், ராஜமெளலியுடன் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் விளக்கமளித்தார். 



இந்நிலையில் தான் RRR படம் ஆயிரம் கோடி வசூலை தாண்டியதன் கொண்டாட்ட பார்ட்டி மும்பையில் நடைபெற்றுள்ளது. இந்தியில் மட்டும் இந்த படம் 200 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. இந்த பார்ட்டியில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் , ராஜமெளலி என படக்குழுவினர் கலந்துகொள்ள அவர்களுடன் பாலிவுட் நட்சத்திரங்களான அமீர்கான், ஹூமா குரோஷி உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர். அந்த புகைப்படங்களை இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கிடையே இதில் ஆலியா பட் கலந்து கொள்ளாதது மீண்டும் சர்ச்சையாகியுள்ளது.


மேலும் படிக்க | மாஸ் காட்டும் அடுத்த அப்டேட்!- ரியல் ‘Beast mode’ ஸ்டார்ட்!



மும்பையில் நடந்த பார்ட்டியில் ஆலியா கலந்து கொள்ளாதற்கு என்ன காரணம் என்று தெரிவிக்கப்படவில்லை. ஆனால் ஆலியாவுக்கு நெருக்கமானவர்கள் அவருக்கு இன்னும் சில தினங்களில் திருமணம் நடைபெற உள்ளதால் அந்த வேலைகளில் அவர் பிஸியாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். அதன்காரணமாகவே அவர் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. ஆனாலும் ஆலியா பட் தான் நடித்த பெரும்பாலான காட்சிகள் எடிட்டிங்கில் நீக்கப்பட்டதால் ராஜமெளலி மீது மிகுந்த கோவத்தில் உள்ளதால் அவர் படத்தின் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளவில்லை என்று பேசப்படுகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR