தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் நடிகை சமந்தா மயோசிட்டிஸ் எனும் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு இருப்பது அனைவருக்கும் தெரியும்.  இருப்பினும் அவர் தனது நோயோடு போராடி மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார்.  சமீபத்தில் சமந்தா நடிப்பில் குணசேகர் இயக்கி, தயாரித்திருந்த 'சாகுந்தலம்' படம் வெளியானது.  புராணக்கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியினை பெறவில்லை.  படத்திற்கு அதிகளவில் எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்தது மற்றும் படம் பாக்ஸ் ஆபிசில் தோல்வியை தழுவியது.  சுமார் ரூ.60 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்த இந்த படம் வெறும் ரூ.10 கோடியளவிலேயே வசூல் செய்திருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | செக் மோசடி வழக்கு: சிறை தண்டனை நிறுத்திவைப்பு, உயர்நீதிமன்றம் உத்தரவு



'சாகுந்தலம்' படத்தின் தோல்வியால் சமந்தாவிற்கு எதிராக விமர்சனங்கள் எழுந்துவரும் சூழலில் தயாரிப்பாளர் ஒருவர் சமந்தாவை கடுமையாக சாடியுள்ளார்.  பழம்பெரும் தயாரிப்பாளர் சிட்டிபாபு சமீபத்தில் சமந்தா பற்றி அளித்த பேட்டியில், "சமந்தா கதாநாயகியாக நடிக்கும் நாட்கள் முடிவடைந்துவிட்டது, அவரால் இனிமேல் மீண்டும் நட்சத்திர அந்தஸ்துக்கு வர முடியாது.  அவருக்கு என்ன கதாபாத்திரம் கிடைக்கிறதோ அதை தான் அவர் இனி தொடர வேண்டும்.  சமந்தா தனது மயோசிட்டிஸ் நோயை வைத்து மக்களிடமிருந்து அனுதாபத்தை பெற முயற்சிக்கிறார்.  எப்போதுமே சென்டிமெண்ட் வேலை செய்யாது, படமும் கதாபாத்திரமும் நன்றாக இருந்தால் தான் ரசிகர்கள் படத்தை பார்ப்பார்கள்.  அதைவிடுத்து மக்களிடம் அனுதாபம் தேடுவது எல்லாம் பைத்தியக்காரத்தனமான மற்றும் கீழ்த்தனமான செயலாகும்.  கதாநாயகி அந்தஸ்து இழந்த சமந்தாவை எப்படி சாகுந்தலா கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்யப்பட்டார் என்பது எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது" என்று கூறியுள்ளார்.


ssதன்னை பற்றி எழும் அனைத்து விதமான விமர்சனங்களையும் சாதரணமாக எதிர்கொள்ளும் சமந்தா, தற்போது தயாரிப்பாளரின் விமர்சனத்திற்கு தக்க பதிலடி கொடுத்திருக்கிறார்.  ஒருவருக்கு காது மடலில் ஏன் அதிகமாக முடி வளர்கிறது? என்று கூகுளில் தேடி அந்த ஸ்க்ரீன்ஷாட்டை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.  ஹார்மோன் சுரப்பு அதிகமாக இருந்தால் காதுகளில் முடி அதிகமாக வளரும் என்கிற கூகுளின் பதிலையும் அவர் பதிவிட்டுள்ளார்.  மேலும் இது யார் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும் எனக்கூறி ஹேஸ்டேக்கையும் பதிவிட்டுள்ளார்.  அதாவது தயாரிப்பாளர் சிட்டிபாபுவின் காது மடல்களில் அதிகளவு முடி வளர்ந்து இருக்கும் என்பதால் சமந்தா இதுபோன்று செய்துள்ளா.


மேலும் படிக்க | தலைவர் 171 திரைப்படம் குறித்த ரஜினியின் திட்டம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ