Samantha Salary: தென்னிந்தியாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர்தான் சமந்தா. வாழ்க்கையில் சில சவாலான காலங்கள் வரும் என்பதைப் போல கடந்த வருடம் மையோசைட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்ட இவர் அதில் இருந்து மீண்டு வந்து தற்போது தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மீண்டும் இணைந்த கூட்டணி


அதில் பல நல்ல படங்களை கொடுத்து கலக்கிக் கொண்டிருக்கிறார் சமந்தா. இந்த சூழலில் அவர் தற்போது the family man வெப் சீரிஸை தொடர்ந்து, ராஜ் & டிகே இயக்கத்தில் இரண்டாவது முறையாக, இந்திய வெர்ஷனின் 'சிட்டாடல்' வெப் சீரிஸில் நடித்துக் கொண்டிருக்கிறார்.


மேலும் படிக்க | கோடிகளில் புரளும் ஆதிபுருஷ் நடிகர்கள்..ஒவ்வொருவருக்கும் இவ்வளவு பெரிய தொகை சம்பளமா!


செர்பியாவில் படப்பிடிப்பு


ஹாலிவுட் வெர்ஷன் சிட்டாடல் வெப் சீரிஸில் பிரியங்கா சோப்ரா, ரிச்சர்ட் மேடன் நடித்திருந்தனர். இந்த படத்தின் இந்தியன் வெர்ஷனில் சமந்தா, வருண் தவான் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது செர்பியா நாட்டில் நடைபெற்று வருகிறது. ஆக்சன் காட்சிகள் நிறைந்த கதாபாத்திரத்தில் சமந்தா நடித்து வருகிறார். மேலும் அவர் இந்த படத்துக்காக தனது சம்பளத்தை எக்கு தப்பாக ஏற்றி உள்ளதாக கூறப்படுகிறது. இதை கேள்விப்பட்ட சினிமா துறையில் இருக்கும் மற்ற ஹீரோயின்கள் வாயடைத்து போய் உள்ளார்களாம். 


முத்தக்காட்சிகள்...


சிட்டாடல் படத்தில் நடித்ததற்காக சமந்தா 10 கோடி ரூபாயை சம்பளமாக பெற்றதாக சொல்லப்படுகிறது. சமந்தா பொதுவாக கடந்த காலங்களில் 4 முதல் 5 கோடி ரூபாய் மட்டுமே சம்பளமாக பெற்றிருக்கிறாராம். ஆனால் இந்த படத்தை பொருத்தவரை அதிபயங்கரமான ஆக்ஷன் காட்சிகள், முத்தக்காட்சிகள், வயது வந்தோர் காண்பதற்கு மட்டுமான காட்சிகள் என பல விஷயங்கள் இந்த சீரிஸில் இருப்பதால் சம்பளத்தை அதிகரித்திருப்பதாக சொல்லப்படுகிறது. சமந்தாவைப் பொறுத்தவரை அவர் தற்போது சிட்டாடல் படம் தவிர விஜய் தேவர்கொண்டா உடன் குஷி, சென்னை ஸ்டோரி போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


நாக சைதன்யா மற்றும் சமந்தா, 2017இல் திருமணம் செய்து கொண்ட நிலையில், அக்டோபர் 2021இல் ஒரு கூட்டறிக்கையில் இருவரும் சமூக ஊடகங்களில் தங்கள் பிரிவியை அறிவித்தனர். தொடர்ந்து, இருவருக்கும் விவாகரத்து ஏற்பட்டது. இதற்கிடையில், நாக சைதன்யா தற்போது பொன்னியின் செல்வன் நடிகர் சோபிதா உடன் டேட்டிங் செய்வதாக கூறப்படுகிறது.


சமந்தாவுக்கு கடைசியாக வெளியான சாகுந்தலம் படம் சரியாக ஓடவில்லை. எனவே, அப்படத்தின் தயாரிப்பாளருக்கும், சமந்தாவுக்கும் வார்த்தை போர் நடைபெற்றது. இது பரபரப்பை உண்டாக்கியிருந்தாலும், சமந்தா தொடர்ந்து பல்வேறு படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.


மேலும் படிக்க | ஃபேஸ்புக் லைவில் விஷம் குடித்த பிரபல நடிகர்..என்ன காரணம் தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ